குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஆண்டவனே உன் மாளிகையில் நான் கண்ணீரில் நீராட்டினேன்.. இந்த ஓருயிரைநீ வாழவைக்க இன்று உன்னிடம் கையேந்தி

11.04.2017-னேன்..அனாதையாக கதறும் அழகிய நடிகை: எல்லோரும் ஓடியாச்சு: பரிதாபம், எல்லாமே கட்டிலில் !  எந்தப்புகழ் உடையவர்நிலையும்  இதுதான். கே.ஆர். விசயா...அந்த நடிகை எம்ஆயிர், சிவாயி, யமினி கணேசன், யெய்சங்கர் என அத்தனை பெரிய கீரோக்களுக்கும் கதாநாயகி. மிகவும் வறுமையான குடும்பம் ஆரம்பத்தில் அவர் தமிழ் திரையில் பெரிய இயக்குனரின் படத்தில் அறிமுகம் ஆனார்.

அவ்வளவு தான் அவரின் அழகான சிரிப்பைக் கண்டு சொக்கிப் போனார்கள் தமிழ் ரசிகர்கள். ரசிகர்கள் மட்டுமா..? பெரிய கீரோக்களும் அசந்து போனார்கள்.

என்ன சிரிப்புடா என்று மெய் மறந்தார்கள். அறிமுகமான படமும் பெரும் வெற்றி. வெள்ளிவிழா..கொண்டாடிய படம். ஆரம்பித்தது சிரிப்பழகி சகாப்தம்.

இரவு பகலாக நடித்தார். ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரங்கள் ஓடி ஓடி வேலை பார்த்தார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என்று தென் இந்தியாவின் கனவுக் கன்னி ஆனார்.

மக்கள் திலகமே இவரின் கால்ட்டுசீக்கு ஆறு மாதங்கள் காத்திருந்தார் என்று அப்போது கூறுவார்கள். அவரின் ஒற்றைப் புன்னகையில் தமிழ் ரசிகர்கள் சொக்கிப் போய் கிடந்தார்கள்.

புகழ் உச்சியில் இருக்கும் போதே ஒரு தயாரிப்பாளரை திருமணமும் செய்து கொண்டார். அதன் பின்னும் பட வாய்ப்புகள் குறையவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால் அதன் பின் தான் பல பெரிய வெற்றிப் படங்கள் கொடுத்தார் அழகிய நடிகை. காலம் உருள, வயதாகியது.

பிள்ளைகள் பெரியவர்கள் ஆனார்கள். காதலித்தார்கள். அம்மாவிடம் கூட சொல்லாமல் திருமணம் முடித்து எங்கோ தொலைவுக்கு சென்று விட்டார்கள். துடித்துப் போனார்.

எத்தனையோ காதல் படங்களில் நடித்த நாயகியால் தன் வீட்டு காதலை எளிதாக எடுத்துக் கொள்ள இயலவில்லை.

காரணம் கண்மூடித்தனமாக வைத்து விட்ட பாசம். உறவுகளும் லாபம் நோக்கம் கொண்டே தேடி வந்தார்கள். எதை அடையலாம்.. என்பது மட்டுமே குறியாக இருந்தார்கள். விரட்டி விட்டார் நடிகை.

ஆந்திராவிற்கே(?) சென்றார் நடிகை. சொத்து பத்துகள் வேகமாக கரைந்தது. கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

கலைவாணி போல இருந்த நடிகை முற்றிலும் முடங்கினார். மது எடுத்துக் கொள்ள துவங்கினார். கவலைகளை மறக்க மது என்று சொல்லிக் கொண்டார்.

மது, மேலும் மேலும் கவலைகளை, கஷ்டங்களை, நோய்களை மட்டுமே தரும் என்று மிக மிக தாமதமாகவே தெரிந்து கொண்டார் நடிகை.

இன்று ஆந்திராவில் ஒரு மலைப்பகுதி கொண்ட இடத்தில்

தனியாக ஒரு சிறு வீட்டில் தனியே போராடுகிறார் என்கிறார்கள். கவனிக்க கூட யாரும் இல்லை அந்த கலைவாணிக்கு..!

படுக்கையில் தானே சிறுநீர் கழித்து விட்டால் அதை சுத்தம் செய்யக் கூட யாரும் இல்லை. சில உறவுகள் கர்நாடகா வந்து விடுங்கள் என்று அழைத்தார்கள்.

ஆனால் அங்கு கணவரின் நினைவுகள் மேலும் கொன்று விடும் என்று போக மறுத்து விட்டார். பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

உறவினர்கள் போன் செய்து நடிகை படும் துன்பங்களைக் கூறினார்கள். எங்களுக்கு வர நேரமில்லை என்று கூறிவிட்டார்கள்.

இப்போது நடிகை துவண்டு போய் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரே ஒரு வேலைக்கார ஆயா எப்போதாவது வந்து சமையல் செய்து வைத்து விட்டு போகும்.

சாப்பிடுவார். மீதி உணவில்தண்ணீர் ஊற்றி வைப்பார். அதனை மூன்று நான்கு நாட்கள் உண்பார். இப்போது நாயகி இருப்பது மட்டுமே கடைசி சொத்து.

அதற்கும் ஒரு கும்பல் காத்திருக்கிறது. அக்கா எப்போ சாவாள்? வீடு எப்போ கிடைக்கும் என்று..!!

ஆண்டவனே உன் மாளிகையில் நான் கண்ணீரில் நீராட்டினேன்.. இந்த ஓருயிரை நீ வாழவைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன்..

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.