குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

இலங்கைக்கான அமெரிக்க தூதர் நாளை வன்னிக்கு திடீர் பயணம் தமிழ் உறுப்பினர்களையும் சந்திப்பார்.

  21.09.  2011  இலங்கைக்கான அமெரிக்க தூதர் பற்றீசியா பியுட்டனிசு திடீர் பயணமொன்றினை மேற்கொண்டு நாளை வன்னி செல்லவுள்ளார். அங்கு பல்வேறு தரப்புகளையும் அவர் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் இரணைமடு செல்லும் அமெரிக்க தூதர் முன்னதாக முல்லைதீவு அரச அதிபர் எம்.பத்திநாதரை  முல்லைதீவு மாவட்ட செயலகத்தில் வைத்து சந்திக்கவுள்ளார். அதை தொடர்ந்து கிளிநொச்சி அரச அதிபரை சந்திக்கும் அமெரிக்க தூதர் பற்றீசியா பியுட்டனிஸ் மாலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். அத்துடன் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சிதேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அங்கத்தவர்களையும் சந்திக்கவுள்ளார்.
 
அத்துடன் வன்னி மாவட்ட இராணுவ கட்டளை தளபதியையும்  அமெரிக்க தூதர் பற்றீசியா பியுட்டனிஸ் சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் அத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இலங்கைக்கெதிரான பொர்குற்றச்சாட்டுக்கள் ஜ.நாவில் முனைப்பு பெற்றுள்ள நிலையிலும் இலங்கை விடயத்தில் அமெரிக்கா அண்மைக்காலமாக கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையிலும்  அமெரிக்க தூதரது வன்னி விஜயம் முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகின்றது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.