20 .09. 2011ஐ.நா மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பான வகையில் சம்ர்பிக்க வேண்டாம்
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்-கீ-மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை, ஐ.நா மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பான வகையில் சம்ர்பிக்க வேண்டாம் என கோரி, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட
9 நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் அவசர மனு ஒன்றை அனுப்பி கோரிக்கை முன்வைத்துள்ளன.
இந்த அறிக்கை மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் திடீரென சமர்பிக்கப்படுவது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
மாலைத்தீவு, பங்களாதேஷ், அல்ஜீரியா, கியூபா மலேசியா, பிலிபைன்ஸ் ஆகிய நாடுகள் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும் இந்த கோரிக்கையுடன் இந்தியா சம்பந்தப்பட்டு இருக்கவில்லை.
இதேவேளை நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்படுவது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக கூறி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.