2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதியன்று, ஐக்கிய நாடுகளின் தகவல்படி, ஜனவரி 20 முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை 4164 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்காவுக்கு அறிவித்துள்ளார்.
சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 7 ஆம் திகதி இலங்கையின் படையினர் முல்லைத்தீவின் 17 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவான கரையோரப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கியிருந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள் ஒன்றுக்கு 33 பொதுமக்கள் போரினால் கொல்லப்பட்டனர்.
அது பெப்ரவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் நாளொன்றுக்கு 63 ஆக உயர்ந்தது.
2009 ஆம் ஆண்டு ஜனவரியில் நாள் ஒன்றுக்கு 184 பொதுமக்கள் வரை காயமடைந்தனர்.
பெப்ரவரி மாதக்காலப் பகுதியில் அது 145 ஆகவும் மார்ச்சில் 115 ஆகவும் இருந்தது.
இலங்கை அரசாங்கத்தினால், முல்லைத்தீவில் இரண்டாவது பாதுகாப்பு வலயம் பிரகடனப்படு;த்தப்பட்ட பெப்ரவரி 12 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் அங்கு 2452 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 5000 பேர் காயமடைந்தனர்.
ஐக்கிய நாடுகளின் தகவல்படி பொதுமக்களின் இலக்குகள் மீது இலங்கைப் படையினர் நாளாந்தம்; எறிகனை தாக்குதல்களை நடத்தி வந்தனர்.
அத்துடன் விமானக்குண்டு வீச்சுகளும் நடத்தப்பட்டன.
ஏ 35 வீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் மாத்திரம், 860 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 3339 பேர் காயமடைந்தனர்.
பலியானவர்களில் 23 சிறுவர்கள் உள்ளடங்குவர். 345 சிறுவர்கள் காயமடைந்தனர்.
கத்தோலிக்க தேவாலயத்தினால் சிறுவர்கள் பலாத்காரமாக படைகளில் சேர்க்கப்படுவதை தடுக்க முடியாமல் போய்விட்டதாகவும் விக்கிலீக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் ஆயரின் தகவல்படி, பாதுகாப்பு வலயத்தில் சுமார் 400 சிறுவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் பிடிக்கப்பட்டு சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளெக் குறிப்பிட்டுள்ளார்.