குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

முட்டல் - மோதல்.... உடைகிறதா சசிகலா அணி?

16.02.2017-சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். மேலும், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தற்போது செங்கோட்டையன்-எடப்பாடி-தினகரன் இடையே மனசுதாபம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது செங்கோட்டையனுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை, இறுக்கமான முகத்துடனே இருக்கிறார் என்கின்றனர். அதேபோல், டி.டி.வி தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிடிக்கவில்லை என்கின்றனர்.

இதன் காரணமாக இவர்கள் மூவருக்கும் இடையே சரியாக பேச்சுவார்த்தை இல்லையாம். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்களும் கூவத்தூர் ரிசார்ட்டில் இருக்க ஆர்வம் காட்டுவதில்லையாம். தற்போது கூவத்தூர் ரிசார்ட்டில் 47 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்களும் அங்கிருந்து வெளியேறத்தான் விரும்புகிறார்களாம்.

இந்நிலையில், முதல்வர் பன்னீர் அணியில் சேர்ந்துள்ள மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் சசிகலா மற்றும் எடப்பாடி மீது தொடர்ந்த கடத்தல் புகார், புயலை கிளப்பும் என கூறப்படுகிறது.

 

யெயவேல்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.