குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சசிகலாவை... யாரும் எதுவும் செய்ய முடியாது!

07.02.2017-"வேலைக்காரி என்பதால் எதிர்ப்பதா? அப்படியானால் வேலைக்காரிகள் எல்லாம் கேவலமா? இதற்காகவே அவர் சீயெம் ஆக வேண்டும்," என்று ஒருகுழு கிளம்பியிருக்கிறது. அந்த கோஷ்டியில் உள்ளவர்கள் ஆகட்டும், நீங்களாகட்டும், நானாகட்டும் எல்லோருமே வேலைக்காரன் அல்லது காரிகள்தான்.

உழைத்து சம்பளம் வாங்கும் எல்லோரும் வேலைக்காரர்கள் அல்லாமல் வேறென்னவாம்? சுடாலினுக்கு சசிகலா எச்சரிக்கை 01:50 தீபாவுக்கு பெருகும் ஆதரவு 00:58 அதிமுக-வில் இணைவேன்-டி. ராயேந்தர் பேட்டி எனவே, எதிர்ப்பு என்பது அவர் வேலைக்காரி என்ற அடிப்படையில் எழுந்தது அல்ல. சொல்லப் போனால் அவர் வேலைக்காரியாக இருந்ததே இல்லை. "அம்மாவுக்கு பணிவிடை செய்வதன்றி வேறேதும் அறியேன்," என்று அவர் சொன்னது அடக்கத்தின் வெளிப்பாடு அன்றி வேறேதும் இல்லை. உயிர்த் தோழி, உடன் பிறவா சகோதரி, உற்ற ஆலோசகர் என்று அத்தனை பெருமைகளையும் அடைமொழியாக அவருக்கு வழங்கியிருக்கிறார் மறைந்த முதல்வர். "அரசியலில் எனக்கு துளியும் ஆர்வமில்லை," என்று எழுதிக் கொடுத்துவிட்டு வேதா நிலையத்துக்குள் மறுபிரவேசம் செய்தவர், ஒரு சனநாயக நாட்டில் மக்கள் எதிர்பார்க்கிற எந்த ஒரு அடிப்படை அரசியல் அனுபவத்தையும் பெறாமல், தன்னை ஆதரித்த தலைவரின் வீட்டில் தொடர்ந்து குடியிருக்க என்ன உரிமை இருக்கிறது என்பதைக்கூட மக்களுக்குத் தெரிவிக்காமல், அங்கிருந்தபடி கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற காய் நகர்த்துவது நியாயமான செயல் அல்ல என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். அது ஒரு பெரிய கட்சி. அரசியல் அனுபவம் மிகுந்த ஏராளமான பிரமுகர்கள் இருக்கிறார்கள். ஆட்சி நிர்வாக அனுபவம் மிகுந்தவர்களும் இருக்கிறார்கள். கட்சியை காப்பாற்றுவதுதான் உண்மையான நோக்கம் என்றால், அவர்களில் ஒருவரை ஆட்சிப் பொறுப்பில் நியமனம் செய்துவிட்டு கட்சி நிர்வாகத்தை கவனிக்கலாம். பொதுச் செயலாளர் பதவியும் முதல்வர் பதவியும் ஒரே நபரிடம் இருந்தால்தான் நல்லது என்பது பசப்பு வாதம். இதைவிட பெரிய பதவியான இந்திய பிரதமர் நாற்காலியில் பிரபலம் அல்லாத ஒரு நல்லவரை அமர்த்தி விட்டு கட்சியை மட்டும் கவனித்தார் சோனியா. அதனால் அங்கே இரட்டை பவர் சென்டர் உருவாகி எதுவும் நாசமாய் போனதாக யாரும் குற்றம் சொல்லவில்லை. இங்கே பன்னீர் செல்வமும் அப்படித்தான் செயல்பட்டார். ஆனால் ஆரம்பம் முதலே அவர் சுதந்திரமாக அல்லது சுயமாக செயல்பட முடியாதபடி எக்கப்பட்ட முட்டுக் கட்டைகள். ஒரு பிரச்னை சம்மந்தமாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதினால்கூட, போட்டிக்கு அதிமுக பொதுச் செயலாளர் என்கிற கோதாவில் இவரும் ஒரு கடிதம் எழுதுவது என்பதில் தொடங்கி, எங்கோ கண்ணுக்கு தெரியாத கிராமத்தில் உள்ள ஏதோ ஒரு சங்கத்தின் தலைவர் தனது குடும்பத்துடன் வந்து பொ.செ.வை சந்தித்தார் என்று தந்தியில் படத்துடன் செய்தி வரவழைப்பது வரை பன்னீரின் பெயர் ஆக மட்டும் பலவீனப்படுத்தப்பட்டது. பன்னீர் இடத்தில் ஒரு பி.எச்.பாண்டியன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அரசியல் சாசனம் பற்றி தெரிந்தவர்களுக்குதான் இது புரியும். முதல்வர் என்பது சாதாரண பதவி அல்ல. தனக்கு இல்லை என்றால் அது வேறு எவருக்கும் கிடைக்க விடக் கூடாது என்று தடுக்க அதில் உள்ளவருக்கு அபரிமிதமான அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி தனது அரசியல் எதிரிகளை, சொந்தக் கட்சியில் உள்ளவர்களே ஆனாலும், தற்காலிகமாவது புழலில் கம்பி எண்ண வைக்கும் அதிகாரமும் அவருக்கு இருக்கிறது. இது தவிர எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதியில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து நல்ல பெயர் வாங்கி, அடுத்த தேர்தலிலும் தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முதல்வரால் பெரிதும் உதவ முடியும். பன்னீர் இதில் எதையும் செய்யவில்லை. பரிசுத்தமான விசுவாசியாக மட்டும் செயல்பட்டார். புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் பல வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளனர். அவரே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார். மேலும் இரு வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தது செல்லாது என சமீபத்தில்தான் ஐகோர்ட் அறிவித்துள்ளது. அவருடைய கணவர் மீதிருந்து விலக்கப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வர வேண்டும் என மேல் கோர்ட் ஆணையிட்டுள்ளது. மற்றொரு குடும்ப உறுப்பினர் பல லட்சம் அபராதம் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் அவர் கொஞ்சம் காத்திருக்கலாம் என முடிவு செய்திருந்தால் அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும். யெயலலிதா மரணம் அடைந்து மிகச்சரியாக ஒரு மாதமே முடிந்த நிலையில் அவர் அமர்ந்திருந்த முதல்வர் நாற்காலியில் தான் அமர இவர் எடுத்த முடிவு பெரும்பாலான கட்சித் தொண்டர்கள், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே அமைந்திருக்கிறது. வெகுயன ஊடகங்கள் என்னதான் மறைக்க முயன்றாலும், சமூக ஊடகம் இருப்பதால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பு அடக்க மாட்டாமல் வெளிப்படுகிறது. அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் மட்டும் இந்த முடிவுக்கு முழு மனதாக சம்மதிக்க காரணம், இன்னொரு தேர்தலை இப்போது சந்திக்க அவர்களில் எவரும் தயாராக இல்லை என்பதுதான். நியாயம், தர்மம் எப்படி இருந்தாலும் சட்ட ரீதியாக சசிகலா முதல்வராவதை தடுக்க பொதுமக்களால் முடியாது என்பது எதார்த்தம். சென்ற ஆண்டு மே மாதம் தேர்தலில் இந்த மக்கள் ஓட்டு போடும்போது, ஜெயலலிதா தலைமையில் ஓர் அரசு வர வேண்டும் அல்லது தொடர வேண்டும் என்றுதான் விரும்பினார்களே தவிர, முதல்வர் யாராக இருந்தால் என்ன, அதிமுக ஆட்சிதான் தொடர வேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. யெயலலிதா இறந்தபின் பன்னீர் செல்வத்தை தமிழக மக்கள் சகித்துக் கொண்டதற்கு காரணம், அவர்கள் அங்கீகரித்த யெயலலிதாவே அவரைத்தான் தனது இடத்துக்கு தேர்வு செய்தார் என்பதுதான். இரண்டு முறை ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து இறங்க நேர்ந்த சந்தர்ப்பங்களில் பன்னீர்செல்வத்தையே அவர் அங்கு அமர வைத்தார். என்றேனும் ஒருநாள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சசிகலா அந்த நாற்காலியில் அமரக் கூடும் என்று தமிழ்நாட்டு மக்களோ அதிமுக தொண்டர்களோ எந்தக் காலத்திலும் கற்பனைகூட செய்திருக்கவில்லை. எல்லாம் தாண்டி இன்று சசிகலா அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தலைவராக வந்துவிட்டார். முறையற்ற வழி என்று சொல்ல முடியுமே தவிர, சட்டப்படி தப்பு வழி என சொல்ல முடியாது. அவர் இதுவரை ஒரு பஞ்சாயத்து கவுன்சிலராகக்கூட இருந்ததில்லை என்பது விமர்சனத்துக்கு உதவலாமே தவிர, சட்டத்துக்கு அது குறித்து கவலை இல்லை. முதல்வராக சசிகலாவுக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதை தவிர வேறு வழியில்லை. அதிலிருந்து ஆறு மாதத்துக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு யெயித்து அவர் எம்.எல்.ஏ ஆக வேண்டும், அவ்வளவுதான். பிறகு சட்டசபையில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு, அதாவது 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக நிரூபிக்க வேண்டும். இப்போதைக்கு அதைவிட 18 எம்.எல்.ஏ.க்கள் அதிகமாக இருப்பதால் சசிகலா பயப்பட எதுவுமில்லை. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்கிற எண்னம் பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கு இல்லை என்பதும் சசிகலாவுக்கு சாதகமான அம்சம். யெயலலிதாவின் தொகுதியான் ஆர்.கே. நகரில் போட்டியிடும் எண்ணம் சசிகலாவுக்கு இலை என தோன்றுகிறது. தென் தமிழக தொகுதிகள் எதிலாவது அவர் போட்டியிட்டு வெற்றி பெற வசதியாக ஒரு அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ பதவி விலகக் கூடும். அந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தப்பித் தவறி ஒன்றுபட்டு பொது வேட்பாளரை நிறுத்தி தீவிரமாக வேலை செய்தால் அது மட்டுமே சசிகலா சந்திக்கும் உண்மையான சவாலாக அமையும். ஒருவேளை அந்த இடைத்தேர்தலில் அதிமுக, அதாவது சசிகலா, தோற்க நேர்ந்தால் அது தமிழக அரசியலில் அடுத்த மாற்றத்துக்கு ஆரம்பமாக இருக்கும். இன்றுள்ள குழப்பமான அரசியல் சூழலில் மோடியின் மத்திய அரசு எத்தகைய அணுகுமுறையை கையாளப் போகிறது என்பதுதான் சராசரி தமிழர்களின் கேள்வியாக நீடிக்கிறது. யார் முதல்வராக வந்தால் பியேபிக்கு லாபம் என்று பார்த்து செயல்படுவது முதல் ஆப்ஷன். யார் முதல்வராக வந்தாலும் வராவிட்டாலும் கவலையில்லை என்று சட்டத்தின் அடிப்படையில், மக்களால் சந்தேகிக்கப்படாத ஒரு அரசை ஏற்படுத்த வழி வகுப்பது அடுத்த ஆப்ஷன். மோடிக்கு இங்கு நடக்கும் முதல் அக்னி பரீட்சை இதுதான்.

மோடி ஆட்டம் ஆரம்பம்! விழி பிதுங்கும் சசிகலா….07.02.2017-

யெ, மறைவிற்கு பிறகு கட்சியை கைப்பற்றிய சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், ஆட்சியை கைப்பற்ற பல முயற்சிகளை செய்து வந்ததையடுத்து அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி சசிகலா தலைமையிலான அரசை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலா அதிமுக சட்டமன்ற தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சசிகலாவை முதல்வராக அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், அதிமுக தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராயினாமா செய்திருக்கிறார்.

ஏற்கனவே தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் உளவுத்துறை மூலம் பிரதமர் மோடி பார்வைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், தமிழகத்தை பிரதமர் மோடி உற்று நோக்கி வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா முதல்வராக அறிவிக்கப்பட்ட மறுநாளே சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றிய அறிவிப்பை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது பல்வேறு சந்தேங்களை எழுப்புவதாகவும், சசிகலாவின் முதல்வர் ஆசைக்கு வைக்கப்பட்ட ‘‘செக்’’

என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றம் திடீரென சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு பற்றி அறிக்கை வெளியிட்டிருப்பது, கண்ணி வைத்து காத்து கொண்டிருந்த மத்திய அரசிடம் சசிகலா வசமாக மாட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் மறுபடியும் பன்னீர்செல்வம் தான் தமிழக முதல்வர் என்பதால் பன்னீர்  உசாராக இருப்பதாக அதிமுகவினரிடையே பரவலாக பேசி வருகிறார்கள்.

பன்னீர்செல்வத்தையும் புறக்கணித்தார் மோடி!  - சசிகலா பதவியேற்பு 'பரிதவிப்பு' பின்னணி

 

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் சசிகலாவுக்காக காத்திருக்கிறது. ஊட்டி நிகழ்ச்சியை தள்ளிப் போட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ், 'பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்' என அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக நம்பினர். அவர்கள் நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. ' சொத்துக்குவிப்பு வழக்கைக் காரணம் காட்டி பதவியேற்பை ஒத்திவைத்துவிட்டனர். இதனால் கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் அபிமானிகள்.

 

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கடந்த 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. ' தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநர் வித்யாசாகர் ராவுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். ' பதவியேற்பு நடக்கும்வரையில் பன்னீர்செல்வமே தொடரட்டும்' என அறிவித்தார் ஆளுநர். இந்நிலையில், 'சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு' என அதிர்ச்சி கிளப்பியது உச்ச நீதிமன்றம். 'கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர், முதல்வர் ஆகலாமா?' என எதிர்க் கட்சித் தலைவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கினர். 'இதையே காரணம் காட்டி பதவியேற்பை ஒத்தி வைத்துவிடுவார்கள்' என அஞ்சிய சசிகலா, "7-ம் தேதி நல்ல நாள். எட்டாம் தேதி நல்ல நாள் இல்லை. ஒன்பதாம் தேதி தைப்பூசத் திருநாளில் பதவியேற்கலாம். அதற்குள் சூழல்கள் மாறிவிடும். நாளையே(7-ம் தேதி) பதவியேற்க வேண்டும். ஆளுநரிடம் சந்திப்புக்கான நேரத்தை உறுதி செய்யுங்கள்' என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அதற்கேற்ப, சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் பதவியேற்புக்கான பணிகள் வேகம் பெறத் தொடங்கின. 'நேற்று இரவு ஆளுநரை சந்திப்பார் சசிகலா' என அ.தி.மு.க நிர்வாகிகள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தனர். 'மும்பையில் அவசர நிகழ்ச்சி இருப்பதால், இரவு 10.30 மணியளவில் ஆளுநர் கிளம்பிப் போய்விட்டார். இந்தத் தகவலை அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டார் சசிகலா. 'நமக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை. ஜனநாயகரீதியாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டரைப் புறக்கணிப்பது நியாயமா?' என ஆதங்கக் குரல் எழுப்பினர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

 

பிரதமர் மோடி"சசிகலா முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவதை காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்களான ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டவர்கள் எதிர்த்தனர். ' சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அவர் எதிர்கொள்ள இருக்கிறார். ஒரு வாரத்தில் தீர்ப்பு என்று வந்துவிட்ட பிறகு, பதவியேற்பில் எதற்காக அவசரம் காட்ட வேண்டும்? அமலாக்கத்துறையின் வழக்குகளையும் அவர் எதிர்கொள்ள இருக்கிறார். வழக்கின் தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்துவிட்டால், பதவி விலக வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வளவு சிக்கல்களை வைத்துக் கொண்டு முதல்வராக பதவியேற்கத்தான் வேண்டுமா?' என எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர். இந்த விவகாரத்தில் பிரதமரின் பார்வை தமிழக அரசியல் களத்தை குறிவைத்திருக்கிறது. ' சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில், சட்டரீதியாக எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், தமிழக மக்களின் அதிருப்தியைச் சந்திக்க நேரிடும் என்றுதான் பா.ஜ.க நினைக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைக்கும் முடிவில் இருக்கிறார் பிரதமர்.

 

அந்தநேரத்தில் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு பன்னீர்செல்வம் சரியான தேர்வாக இருப்பார்' என்று நம்பித்தான், மாநில அரசின் உரிமைகளுக்கு சட்டரீதியான அங்கீகாரத்தைக் கொடுக்கும் பணியைத் துரிதப்படுத்தினார் மோடி. ஆனால், அவருடைய நம்பிக்கைக்கு மாறாக பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததை, பா.ஜ.க மேலிடம் ரசிக்கவில்லை. 'இனி பன்னீர்செல்வத்தையும் நம்ப முடியாது' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். 'சசிகலாவை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தால், ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோபம் பா.ஜ.கவை நோக்கித் திரும்பும். இப்படியொரு அழிவு ஏற்படுவதற்கு நாம் காரணமாக இருக்க வேண்டுமா?' என மத்திய உளவுத்துறையின் அறிக்கையைக் குறிப்பிட்டு பிரதமரிடம் விவாதித்தார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. இதையடுத்து, ஆளுநரையும் மும்பைக்குச் செல்ல அறிவுறுத்தினர். 'சென்னையில் இருந்தால், பதவிப் பிரமாணம் செய்து வையுங்கள்' என அ.தி.மு.க மட்டுமல்லாமல், ஆளுநருக்கு வேண்டப்பட்ட சிறிய கட்சிகளின் தலைவர்களும் ராஜ்பவனுக்குப் படையெடுப்பார்கள் என்பதால்தான், தலைமையின் முடிவுக்கு ஏற்ப மும்பை விரைந்தார் வித்யாசாகர் ராவ்" என விளக்கினார் ஆளுநர் மாளிகை வட்டார அதிகாரி ஒருவர்.

 

வித்யாசாகர் ராவ்'ஜெயலலிதா இறந்தபிறகு, ஆட்சி அதிகாரத்திற்குள் குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பைக் கொடுத்தோம். இப்போது சசிகலாவை முன்னிறுத்துகிறீர்கள். நாளை அவருக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டால், முதல்வராக இன்னொருவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வையுங்கள் எனத் தேடி வருவீர்கள். நிலையான ஆட்சி என்பதற்கு இதுதான் அடையாளமா? மாறி மாறி முதல்வர் நாற்காலியை இடம் மாற்றிக் கொண்டிருந்தால், நிலையான ஆட்சியை நோக்கி எப்படி நடைபோட முடியும்? இப்படியொரு குழப்பச் சூழலில் சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சியான தி.மு.கவுக்கு வாய்ப்பளிப்பதில் என்ன தவறு?' என ஆளுநர் மாளிகை கேள்வி எழுப்பியதாகவும் அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 

தமிழக பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். " ஒரு கட்சியில் எந்த ஈடுபாடும் காட்டாமல், கட்சிப் பணி எதையுமே செய்யாமல், மக்கள் போராட்டங்களை முன்னெடுக்காமல் முதல்வர் பதவியை ஒருவர் எட்டிப் பிடிப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். 'தலைவியோடு முப்பது ஆண்டுகள் இருந்தேன். அதனால்தான் முதல்வர் பதவியைக் கொடுங்கள்' என்று சொல்வதே ஜனநாயகத்திற்கு விரோதமானதுதான் என்பதை மக்களுக்குச் சுட்டிக் காட்டுகிறோம். ' கட்சியும் ஆட்சியும் ஒரே இடத்தில் இருந்தால்தான், அதிகாரத்தை சிறப்பாகக் கொண்டு போக முடியும்' என அ.தி.மு.க நிர்வாகிகள் பேசுகின்றனர். இது முற்றிலும் தவறானது. அப்படியானால், பன்னீர்செல்வத்திடம் என்ன குறையைக் கண்டுவிட்டார் சசிகலா? எங்கள் கட்சியில் ஆட்சி அதிகாரம் பிரதமரிடமும் கட்சி அதிகாரம் அமித் ஷாவிடமும் இருக்கிறது. இரண்டும் நல்லபடியாகத்தானே சென்று கொண்டிருக்கிறது. 'முதலமைச்சராக பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்படவில்லை. மக்கள் அதிருப்தியை சம்பாதித்துவிட்டார்' என்றால், இவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது? அவசரகதியில் பதவியேற்க வேண்டிய சூழல் எதுவுமே இப்போது இல்லை. இரண்டு மாநிலங்களின் ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருக்கிறார். அவருக்கு நிர்வாகரீதியாக ஏராளமான பணிகள் இருக்கின்றன. பதவியேற்பு தள்ளிப் போவற்கு அவரைக் காரணம் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை" என்றார் நிதானமாக.

 

கார்டன் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்த 'நல்லநாள்' தள்ளிப் போகும் கவலையில் இருக்கிறார் சசிகலா. ' ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மாறாக பதவியில் அமர நினைக்கிறார் சசிகலா' என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறது தி.மு.க. ' இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமல்ல, எப்போதுமே சசிகலா பதவியில் அமரக் கூடாது' என பா.ஜ.க நிர்வாகிகள் வேலை பார்த்து வருகின்றனர். ' கழுத்து எலும்பு தேய்மானம்'  எனக் கூறிவிட்டு, அப்போலோ வி.ஐ.பிக்கள் வார்டில் படுத்துக் கிடக்கிறார் ம.நடராசன். ' அரசியல் சூழல்கள் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை' என்றே அச்சப்படுகின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள்.

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.