இவர்களில் மொஹமெட் நளீம் ஸக்கி அஹமட் தமிழ் மொழிமூலம் இப் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம் மூவருக்கு அடுத்ததாக இரு மாணவர் தலா 194 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் நான்காம் இடம் பெற்றுள்ளனர். வவுனியா விஸ்வமடு மேற்கில் உள்ள நெத்தலியாறு தமிழ் வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், மற்றும் பிலிலை மெதகம மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த டி. எம்.இஷான் லக்ஷிதசத்சர சுமனபால ஆகி யோரே இவ்விருவருமாவர்.
யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி ரமேஷ் நிதூயா 192 புள்ளிகள் பெற்று யாழ்.மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் லோ.டிலோன் 191 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.