யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களில் அநேகமானவர்களுக்கு வெளிநாடுகளில் உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களின் நிதி உதவிகளினால் பிரதேசத்தில் அபிவிருத்தி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் மூன்றரை லட்சம் பேரும், அமெரிக்காவில் மூன்று லட்சம் பேரும், கனடாவில் மூன்றரை லட்சம் பேரும் வேலை செய்வதாகவும், சுவிட்சர்லாந்து, நோர்வே உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான யாழ்ப்பாண மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு வெளிநாட்டில் வாழும் மக்கள் அதிகளவு பணத்தை அனுப்பி வைப்பதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தில் அதிகளவான வங்கிகள் கிளைகளை ஆரம்பித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.