குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு அதிகளவு பணத்தை அனுப்பி வைக்கின்றனர்-விதைத்தவன் யாரோ அறுப்பவன் யாரோ!

16.09.2011-வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு அதிகளவு பணத்தை அனுப்பி வைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.பெருந்தொiகாயன பணம் உள்வருவதனால் யாழ்ப்பாணத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கே.பூரணசந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் உதவிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் நிதி உள்ளீடு போன்றவற்றினால் பிரதேசத்தில் துரித அபிவிருத்தியை எட்ட முடியும்.

யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களில் அநேகமானவர்களுக்கு வெளிநாடுகளில் உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களின் நிதி உதவிகளினால் பிரதேசத்தில் அபிவிருத்தி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் மூன்றரை லட்சம் பேரும், அமெரிக்காவில் மூன்று லட்சம் பேரும், கனடாவில் மூன்றரை லட்சம் பேரும் வேலை செய்வதாகவும், சுவிட்சர்லாந்து, நோர்வே உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான யாழ்ப்பாண மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு வெளிநாட்டில் வாழும் மக்கள் அதிகளவு பணத்தை அனுப்பி வைப்பதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தில் அதிகளவான வங்கிகள் கிளைகளை ஆரம்பித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.