குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதம் .வெளிநாடுகளில்.சைனட்(குப்பி

 இல்லாப்புலிகளும் விசாரிக்கப்படலாம்.
16.09. 2011  ஒன்றரை மணித்தியாலம் ஒதுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய விவாதம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடர் இடம் பெறும் கால கட்டத்தில், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் பற்றியவிவாதத்திற்கு ஒன்றரை மணித்தியாலம் ஒதுக்கப்பட்டுள்ளது.வன்னியில் முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற மோதலின் போது படைகள் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் என்பன இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய தமது கரிசனையை வெளியிட்டு வருகின்றன.
 
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கோரும் சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கு வழிகோலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.