இல்லாப்புலிகளும் விசாரிக்கப்படலாம்.
16.09. 2011 ஒன்றரை மணித்தியாலம் ஒதுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய விவாதம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18 ஆவது கூட்டத் தொடர் இடம் பெறும் கால கட்டத்தில், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் பற்றியவிவாதத்திற்கு ஒன்றரை மணித்தியாலம் ஒதுக்கப்பட்டுள்ளது.வன்னியில் முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற மோதலின் போது படைகள் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் என்பன இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய தமது கரிசனையை வெளியிட்டு வருகின்றன.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கோரும் சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கு வழிகோலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.