இருந்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் வடக்கு நிலைமைகள் பற்றி தாம் தயாரித்த அறிக்கை ஒன்றை ஐ.நா பொதுச்செயலருக்கு அனுப்பியதாகவும், அந்த அறிக்கையையும் இணைத்தே மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில், போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்வதற்கு நிபுணர் ஒருவரையும் பான் கீ மூன் நியமித்துள்ளார்.
ஐ.நா சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா அகமட் ஒபெய்ட் [Thoraya Obaid, former Executive Director of the UN Population Fund - UNFPA] என்ற நிபுணரையே இதுபற்றி மீளாய்வு செய்யுமாறு பான் கீ மூன் கேட்டுள்ளார்.
இவர் தனது பணிகளை விரைவில் தொடங்குவார் என்றும் ஐ.நா செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.