இறுதிக் கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியது மனித உரிமைப் பேரவையின் கடமையாகும் எனவும் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
முழுமையான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைப் பேரவை அறிவிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்த இது பொருத்தமான தருணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலமாக நியாத்திற்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபையும் இலங்கை தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைப் பேரவையின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்துக்கான பிரதித் தூதுவரை இலங்கை மீள அழைக்கவுள்ளது?
14.09. 2011 சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கான இலங்கைப் பிரதித் தூதுவர் ஜெனரல் ஜகத் டயஸை அரசாங்கம் மீள அழைக்க உள்ளதாக சுவிட்சர்லாந்து செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 57ம் படையணியின் கட்டளைத் தளபதியாக ஜெனரல் டயஸ் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் உரிமை மீறல்களுக்கும் ஜகத் ஜயஸிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்திப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நிலையத்தின் மனித உரிமை மத்திய நிலையமும் ஜகத் டயஸ் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் குறித்த சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மன் அரசாங்கங்கள் இலங்கையுடன் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 57ம் படையணியின் கட்டளைத் தளபதியாக ஜெனரல் டயஸ் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் உரிமை மீறல்களுக்கும் ஜகத் ஜயஸிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்திப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நிலையத்தின் மனித உரிமை மத்திய நிலையமும் ஜகத் டயஸ் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் குறித்த சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மன் அரசாங்கங்கள் இலங்கையுடன் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.