உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டுனெவும் வலியுறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கின் சில பகுதிகளில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதியில்லை எனவும், இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பிரதமரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடற்படையினரை வேவுபார்த்த சீன உளவு சேவைக் கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது.
இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளை வேவு பார்த்த சீன உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக இந்தியாவின் என்.டி.ரீ.வி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.மீன்பிடி ட்ரோலர் படகை போல் பயணித்த சீனாவின் உளவு சேவைக்கு சொந்தமான கப்பல் பல்வேறு தகவல்களை திரட்டிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தக் கப்பலை இந்திய கடற்படையினர் கண்காணித்ததையடுத்து அந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தமானின் சிறிய தீவுகளுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபடும் தோரiணில் குறித்த கப்பல் தகவல்களை திரட்டிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த மாதத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படும் இந்த கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், இத்தகைய படகொன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தமை தொடர்பாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.