உள்வீட்டுக்காரர் எதிர்வீட்டுக்காரர் ஆகி இரண்டுபட்டதால்
புதுமாத்தாளன் மூடுமந்திரத்தின் முடிச்சு அவிழ்ந்தது சரத்பொன்சேகா திருவாய்திறந்தார்.
கிராமப்புறத்து தோட்டங்களில் குரங்குகாவல் முறையை ஊரவர்கள் கையாள்வார்கள்.தேங்காய்ச்சிரட்டையில் மிளகாய்ப்பொடி அருகருகே அய்ந்து ஆறு கொட்டன்கள் போட்டுவிடுவார்கள்.
குரங்குகள் இறங்கிவந்து மிளகாய்ப்பொடியை கையில்பிரட்டும் அகோரமாய் எரிவு உண்டாகும்... அதே கையால் தங்கள் கண்களில் மூஞ்சையில் பின்பகுதியில் நாக்கில் பிரட்டிவிட்டு கோபங்கொண்டு கொட்டன்களை எடுத்து தங்களுக்கு தாங்களே அடிபட்டுச் செத்துப்போகும் எந்தச்செலவும் இல்லாது தோட்டக்காவல் நிகழ்ந்துவிடும்.
இதுமுன்பு தமிழ்க்குழுக்களிடையே நிகழ்த்தப்பட்டது.தற்போது தமழ்கட்சிகளிடையே பயன்படுத்தப்படுகிறது.. இப்போ தேர்தலில் வேட்பாளர்களிடையேயும் இந்த குரங்குக்காவலையே நிகழ்த்துகிறார்கள்.
வெள்ளைத்தோட்டக்காரர்கள் வினையை சிங்களத் தரப்பபுக்குள் புகுத்தியுள்ளார்கள்.
செலவும் செய்மதியும் இல்லாது நடந்த உண்மைகளை.. ஆதாரங்களை. முள்ளுமில்லாது கத்தியுமில்லாது தோண்டிஎடுக்கிறார்கள் இறக்கப்போவது குரங்குகள்.. வெல்வது குரங்குகாவல் முறையை உருவாக்கிய வெள்ளைத்தோட்டக்காரர்கள்.
தமிழ்த்தரப்பு இக்காலத்தை வெற்றிதோல்விக்கப்பால் நன்கு பயன்படுத்தும் நிபுணத்துவத்தை கையாளவேண்டும்.இதுவரை துன்பப்பட்டவர்கள் தமிழர்கள் அவர்கள் உணர்வுடன் வாழ்ந்தார்கள்...இன்றைய..எதிர்கால நிலையை கருத்தில்கொண்டு அவர்களை யாருக்கு வாக்களிக்கும்படி வெளிப்படையாக கூறவேண்டியதுதானே.இதைவிடுத்து தமது இருக்கை பற்றியோசித்து எந்த வாலைப்பிடிப்பது என்று தடுமாறுகிறார்கள் என்பது தெரிகிறது.
வவுனியா தாடிகோட் கட்சிக்காரர்கள் வவுனியா துன்ப நிகழ்வுகளில் இருந்து தப்பி சில சலுகைகளை காட்டி வெற்றிலைக்கு ஆதரவளித்து வெற்றி உலாவர எண்ணுகிறார்கள்.இவர்களை எல்லாம் சேர்த்து போர்க்குற்றத்திலிருந்து தப்ப பெரியவர்கள் முயல்கிறார்கள்.
மகிந்த இராசபட்ச வென்றால் இலங்கை அரச நிருவாகம் தனியார் நிர்வாகம் ஆகும். எதிர்க்கட்சிகள் நேர்மையாகக் கடுமையாக உழைத்தாலும் தேர்தல் காலத்திருட்டைத் தடுக்க மக்களை வைத்து சரியான திட்டம் எதையும் தீட்டவில்லை சிறிய வித்தியாசத்தில் தோற்றுவிடவும் வாய்ப்புண்டு.
சிறுகட்சிகளைத் தன்பக்கம் இழுத்துவிடுவார் மகிந்த த.தே.கூ அமைப்பு சிதைந்து நிற்கும்.வெற்றிக்கொண்டாட்டம் டெல்லி இந்தியாவிலும் நிகழலாம். இலங்கையெங்கும் குண்டர் கொண்டாட்டம் நிகழும் சில்லறைத்தலைகள் சிலஉறுழலாம்.
தமிழர்கள் கட்சிகளையும் சின்னத்தையும் கைவிடவேண்டிய நிலைவரும்.
ஏ -9 பாதையின் துலா குறுக்கே நிற்கும் யாழ்நிலை மாறும்.எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஓர்அணி மக்கள் பல பக்கம்.
மகிந்தவின் வெற்றிக்கான காரணங்களாக 1.அதிகாரம் 2.குட்டிச்சாத்தான்களின் உறுட்டுப்பிரட்டு. வன்னித் தமிழ் வாக்குகள் சிறுவித்தியாசத்தில் மகிந்தவை வெல்லவைக்கலாம்.
இந்தியா தே.கூட்டமைப்பை பயன்படுத்த திட்டமிடும் இலங்கை அரசுக்கு எதிராகவும்.புலம்பேர் தமிழ் அமைப்புகளின் தலைமைகளுக்கு எதிராகவும் திருப்பப்படும்.புலம்பேர் தமிழர்கள் உணர்ச்சிவசப்படாமல் அமைதிகாத்து பொறுமையாக இருந்து மக்களின் மீட்சியைப் பார்க்கவேண்டும். காலப்போக்கில் தலைவர்களை மக்களே இணைத்துவிடலாம்.
இனித்தேர்தலின்பின் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? என்றே எண்ண வேண்டும்.