28.12.2009 இல் பிரசுரிக்கபட்டது.
2009 இல் இலங்கையின் நிர்வாகியார்? இராணுவத்தீர்வு என்று நின்றது யார்?
சார்க்மாநாட்டை இலங்கையில் நடத்தி.. இதற்கு காவல்காக்க கப்பலில் வந்து நின்றது யார்? இவர்கள் திரும்பிச்சென்றார்களா? போரின்போது எத்தனை பேர் நின்றார்கள்? இதிலிருந்து இந்த ஆண்டு (2009) யார் இலங்கையை நிர்வகித்தது என்பதுபுரியும்.
மதிப்புக்குரிய இந்ததொப்பிக்காரனின் எண்ணத்துக்கு இங்கே தாளம் போட்டது யார்? இங்கு இருந்த ப.தொப்பிக்காரனா? அல்லது சி.துண்டுக்காரனா? இந்தப்பிடுங்குப்பாட்டாலேதான் இன்று இழுபறி மக்களுக்கு சேவைசெய்யவந்தவர்கள் ஏன் சில இடத்தில் மட்டும் நின்று சிகிச்சை அளித்தனர்? சிலவைத்தியசாலைகளில் சிறுபாதிப்பு உள்ள உறுப்புகளும் அகற்றப்பட்டதாம் உண்மையா? மறக்கலாமா? சில வைத்தியசாலைகளில் கருவறுப்பு நடந்ததாம் உண்மையா? வன்னியில் ஊனமுற்றவர்கள் எங்கே? மருந்துக்கு போனவர் சவக்காம்பறாக்குள் அடையாளம் காணப்பட்டார். அவர் சாவீட்டுக்கு பிள்ளையே வரமுடியவில்லை. நலன்புரிநிலையத்தில் மனிதநேயச்சட்டமாம் உணவை எறிந்தார்களாம்.இயலாதவர்கள் மிதிபட்டு இறந்தார்களாம்.
நகைகளை தமிழர்களும் அறாவிலைக்கு வாங்கினார்களாம்.. உணவிற்கு ஏலம்போட்டுபேரம் பேசினார்களாம்... சேர்வைப்போத்தலில் உறவுகளுக்கு உசார்பானம் கொடுத்தார்களாம்.. விடயத்திற்கு வருவோம்....இலங்கையர் என்று தன்னாதிக்கமாய் நின்றது யார்?
தொப்பித்தாடிக்கு பொம்மை ஆடியது யார்? சி.துண்டா? ப.தொப்பியா?
இரசியாவில் சனாதிபதி மகிந்தவிற்கு முடி(கிரீடம்) கலாநிதிப் பட்டம் வழங்கியமை..
சரத் பொன் கைது... பூநூல் கூட்டத்தின் மூடுமந்திரம்.மேற்குலகினதும் அமெரிக்காவினதும் சாய்வின் அறிகுறி!ஆசியாவின் உயர்ச்சி ஆரம்பம்.
தமிழர் நிலை திரிசங்கு சொர்க்கமா?
உலக பொருளாதாரத்தில் தமிழரின் தாக்கம் வருமா?
ஒருங்கிணைந்த வர்த்தகப் பொருளாதார சிந்தனை வளருமா?
பட்டு உற்பத்தி இலத்திரன் உற்பத்தி நாடுகளையும் பொறிகள் (வாகனங்கள்) உற்பத்தி செய்யும் நாடுகளையும்
ஈர்ப்பதற்கு ஏற்ற கூட்டு முடிவுகளைத் தமிழர்கள் எடுப்பார்களா?
இவைகள் எம்மில் இல்லாதவரை தமிழர்களுக்கான நீதி கிடைக்காது. அங்காடிகளை யார் கையாளத்தகுதியுடையவர்களோ அவர்களின் கருத்துக்களே உலக அரங்கில் எடுபடும். கண்ணகி காலத்திலும் மனநீதிச் சோழன் காலத்திலும் உலகமமில்லை.2000 ஆண்டுகளுக்கு முன்னே பொருள் இல்லாதோர்க்கு இவ்வுலகில்லை என்று திருவள்ளுவர் குறள்மூலம் கருத்துரைத்துள்ளார்.
வல்லரசுகளின் பொருளாதாரப் பொம்மலாட்டம் நடக்குது ஏழைநாடுகளின் சிலமுகங்கள் நூலின் அசைவுக்கு நன்கு ஆடுது.
வாக்குக்கேட்டு போட்டிகளும் சாட்டுக்கு நடக்குது.
இலங்கையில் தமிழர் மூலம் பணம் குவிகின்றது.இதனால் உலகமெங்கும் உழைக்கும் தமிழர்களின் பணத்தில் உலகம் குறிவைத்து விட்டது.அன்று சமாதான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
உலகத்தமிழரின் பணம் யாரின் கையில் இருந்து சுழன்றதோ அதற்கும் குறிவைத்து 2009 இல் அதை மாற்றி விட்டார்கள்.
தமக்கு ஏற்ற ஆளைத்தெரிந்து எடுப்பதிலும் சனநாயக முறைக்கு போட்டிக்கு வந்தார்கள். அதில் வெற்றி எடுத்துக்கொடுக்கக் கூடியவர்கள் நவகுடியேற்றவாதம் செய்தார்கள் வெற்றி பெறத்தெரிந்த பக்கம் வென்றது.
அந்தப்பக்கமே இன்று உலகபொருளாதாரம் உயர்ந்து வருகிறது.
ஈழத்தமிழரின் பணத்தைக் கையாளவே வடக்கு கிழக்கில் வங்கிக் கிளைகள் ஆரம்பம்.
மத்தியவங்கி திட்டம் தீட்டியிருப்பதை தற்போதைய கவர்ச்சியான அறிவித்தல் மூலம் தமிழர்நாம் உணரவேண்டும். எனவே எம்மிடமிருக்கும் ஒரே பிடி எம்பொருளாதாரம்.இதைக்கையாண்டு கொண்டே மற்றவிடையங்களையும் கையாளவேண்டும்.
இதைவிடுத்து நிகழும்.. தேர்தல்கள் சாதாரணமானவை. நீண்காலத்திட்டமும் அவசியமானது ஏன் உலகம் போல் மென் போக்குமில்லையென்றால் உலகத்தில் தோல்விகளையே சந்திப்போம்.
ஆசியதரப்பு வல்லரசுகளுக்கு தமிழர்தரப்பு நியாயங்கள் தமிழர்தரப்பால் சிறப்பாகச்செயல்பட்டு எடுத்துரைக்கப்படும் வரை அயலாரின் வெற்றி நிகழும்....அத்துடன் உலகநாடுகளின் அரசியல் கட்சிகளில் ஈழத்தமிழரின் தாக்கம் ஏற்படவேண்டும்.
தமிழினத்தின் வரலாறு பற்றியும் தமிழ்மொழியின் வரலாறுபற்றியும் எடுத்துரைக்ககூடிய வல்லுனர்களும் ஈழத்தமிழர் அரசியலில் ஈடுபடவேண்டும்.
சர்வதேச சட்டதுறையில் பாண்டித்தியம் பெற்று அய்.நா. சபை போன்ற உலகநிர்வாகங்களில் தமிழர் ஈடுபடவேண்டும்.எடுத்துக்காட்டாக திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் போன்று..
முருகவேள் ஆசிரியர்