வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று காலை 9 மணிக்கு கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15நாட்களுக்கு உற்சவம் நடைபெறும்.கொடியேற்ற வைபவத்தை காண குடாநாட்டில் பல பாகங்களிலிருந்தும் மக்கள் பெருந்தொகையாக வருகை தந்திருந்தனர்.
அடுத்தமாதம் 6ஆம் திகதி பூங்காவனமும் 7 ஆம் திகதி காலை 8 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும் 10 ஆம் திகதி காலை 6 மணிக்கு சப்பறத் திருவிழாவும் 11 ஆம் திகதி காலை 9 மணிக்கு தேர்த்திருவிழாவும் 12 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.
சமஷ்கிருத மந்திரங்கள் இன்றி பிராமணர்கள் அல்லாதவர்களால் பூசை நடத்தப்படும் ஆலயங்களில் செல்வசந்திதி முருகன் ஆலயமும் ஒன்றாகும்.
சிவஸ்ரீ சிவானந்த ஐயர், செல்வமணி ஐயர் ஆகியோர் கிரியைகளை செய்தனர்.