ஈழத் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இந்திய அரசிடம் எடுத்துச் செல்வதற்கு சரியான வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்வதென்றும்,
இது தொடர்பாக எமது நாட்டிலும், உலக நாடுகளிலும் வாழும் அறிவுஜீவிகளின் ஒருங்கிணைப்பையும், ஆலோசனையையும் பெறுவதென்றும்,
தமிழர் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஏற்ற வகையில் கூட்டுத் தலைமை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பாக அடுத்த மாதம் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழர் விடுதலைக்கூட்டணி,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,
பத்மநாபா.ஈ.பி.ஆர்.எல்.எப்.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
முன்னாள் சனாதிபதி சந்திரிகா புதிய கட்சி அமைத்து அரசியலில் பிரவேசிக்க திட்டம்!
முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலர் புதிய கட்சி ஒன்று அமைப்பது தொடர்பில் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் அரசியலில் ஈடுபட நாட்டம் கொண்டுள்ளமை காரணமாக அவர் ஒரு புதிய கட்சியின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
இது தொடர்பில் அண்மையில் அவரது தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசுக்கு நெருக்கமானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்று புதிய கட்சி தொடர்பில் ஆராய்ந்தனர் என மேலும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.