குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

புதுடில்லி மகாநாட்டினைத் தொடர்ந்து, நான்கு தமிழ் கட்சிகள் சென்னையில் சந்திப்பு!மீண்டும் சந்திரிக்கா!

28.08.2011புது டெல்லியில் நடந்த இலங்கை தமிழ் கட்சிகளின் மகாநாட்டினைத் (23,24-08-2011) தொடர்ந்து  நான்கு தமிழ் கட்சிகள் சென்னையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தின.தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்.), பத்மநாபா. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா. ஈ.பி.ஆர்.எல்.எப்.), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) ஆகிய நான்கு கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டன. இக் கலந்துரையாடலின் போது,

ஈழத் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இந்திய அரசிடம் எடுத்துச் செல்வதற்கு சரியான வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்வதென்றும்,

இது தொடர்பாக எமது நாட்டிலும், உலக நாடுகளிலும் வாழும் அறிவுஜீவிகளின் ஒருங்கிணைப்பையும், ஆலோசனையையும் பெறுவதென்றும்,

தமிழர் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஏற்ற வகையில் கூட்டுத் தலைமை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பாக அடுத்த மாதம் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக்கூட்டணி,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,
பத்மநாபா.ஈ.பி.ஆர்.எல்.எப்.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி

முன்னாள் சனாதிபதி சந்திரிகா புதிய கட்சி அமைத்து அரசியலில் பிரவேசிக்க திட்டம்!

முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டார‌நாயக்க குமாரதுங்கவுடன் அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலர் புதிய கட்சி ஒன்று அமைப்பது தொடர்பில் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் அரசியலில் ஈடுபட நாட்டம் கொண்டுள்ளமை காரணமாக அவர் ஒரு புதிய கட்சியின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

இது தொடர்பில் அண்மையில் அவரது தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அரசுக்கு நெருக்கமானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்று புதிய கட்சி தொடர்பில் ஆராய்ந்தனர் என மேலும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.