அவசரகாலச் சட்டத்தின் சரத்துக்களின் அடிப்படையிலேயே உயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் பொதுமக்களை கைது செய்வதற்கான அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்களை இராணுவத்தினர் கைது செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டடங்கள் மற்றும் இடங்களை புகைப்படம் எடுப்பதற்கு காணப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரொபர்ட் ஒ பிளக் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்
28.8.2011 ரொபர்ட் ஓ பிளக் இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.
இலங்கைக்கு பயணம் செய்ய உள்ள தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராயாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக், சனாதிபதி மகிந்த ராசபட்சவை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ரொபர்ட் ஓ பிளக்கின் இலங்கை பயணம் குறித்த அறிக்கை வெளியிட்டிருந்த அமெரிக்க ராயாங்கத் திணைக்களம், சனாதிபதியை சந்திப்பாரா என்பது பற்றி குறிப்பிடவில்லை.
ரொபர்ட் ஓ பிளக் இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.
இலங்கை பயணத்தின் நிறைவின் போது விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை பிளக் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிளக் வலியுறுத்தக் கூடுமென சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.