குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

தமிழர்கள் வாழத்தடை புலித்தடைச்சட்டம் நீக்கமாம் பின்பகுதியால் சிரிப்பதா?

29.08. 2011  அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை ஆகியன ரத்தாவதாக சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதனுடன் தாடர்புடைய சட்டங்களும் வலுவிழப்பதாக சிவில் உரிமைகள் அமைப்பின் சட்டப் பணிப்பாளர் சாலிய எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
 
அவசரகாலச் சட்டத்தின் சரத்துக்களின் அடிப்படையிலேயே உயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இராணுவத்தினர் பொதுமக்களை கைது செய்வதற்கான அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
 
எனினும், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மக்களை இராணுவத்தினர் கைது செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கட்டடங்கள் மற்றும் இடங்களை புகைப்படம் எடுப்பதற்கு காணப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
ரொபர்ட் ஒ பிளக் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்
28.8.2011  ரொபர்ட் ஓ பிளக் இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்ய உள்ள தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராயாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக், சனாதிபதி மகிந்த ராசபட்சவை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ரொபர்ட் ஓ பிளக்கின் இலங்கை பயணம் குறித்த அறிக்கை வெளியிட்டிருந்த அமெரிக்க ராயாங்கத் திணைக்களம், சனாதிபதியை சந்திப்பாரா என்பது பற்றி குறிப்பிடவில்லை.

ரொபர்ட் ஓ பிளக் இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.

இலங்கை பயணத்தின் நிறைவின் போது விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை பிளக் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிளக் வலியுறுத்தக் கூடுமென சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.