28.08.2011-திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்டமான சிறிலட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலின் மகா திருமுழுக்கு எதிர்வரும் புதன்கிழமை காலை நடைபெறவிருக்கின்றது.
அதற்காக பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது. எண்ணெய்காப்பு சாத்துதல் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவு பெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலையிலிருந்து எண்ணெய்க்காப்பு சாத்துவதில் ஈடுபட்டனர்.
இப்புதிய கோயில் திருகோணமலை- நிலாவெளி வீதியில் திருகோணமலை நகரிலிருந்து ஆறு மைல் தொலைவில் ஆறாம் கட்டை என்னும் இடத்தில் சாம்பல்தீவு கிராமத்தின் நுழைவாயிலின் முன்பாக ஆறரை ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் நீளம் 235 அடி, அகலம் 115. மொத்த பரப்பளவு 26,400 சதுர அடி.
இவ்வாறான பிரமாண்டமான இந்து ஆலயம் ஒன்று வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இலங்கையிலேயே இல்லை என்று சொல்லப்படுகின்றது.