யாழ் சட்ட வைத்திய அதிகாரி சிவரூபன் சம்பவ இடத்திற்கு சென்று சோதனைகளை நடத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த இடத்தில் 10 பேரின் எலும்பு கூடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு முன்னர், இந்த இடத்தில் அவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சோதனையில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட இடத்தில் ஆடைகள் எதுவும் காணப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் 18 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. அதில் இருந்து இதுவரை காலமும், யாழ்ப்பாணம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இதேவேளை எழும்புக் கூடுகள் மீட்கப்பட்ட பிரதேசத்தில் முன்னர் கடற்படைமுகாம் ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.
ஜயலலிதா - சுஷ்மா சுவராஜ் - மீரா குமார் ஆகியோரை இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளது:-
28.08.2011 தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், இந்திய நாடாளுமன்ற சபாநயகர் மீரா குமார் ஆகியோரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்து, அடுத்த மாதம் 17 ஆம் திகமுதல் 27 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்க எண்ணியிருந்த போதிலும், அந்த திகதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வடக்கு கிழக்கில் 90000 பெண்கள் குடும்பப் பராமரிப்பாளர்களாக வாழ்கின்றனர்
28.08. 2011 வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 90000 பெண்கள் குடும்பப் பராமரிப்பாளர்களாக வாழ்கின்றனர் என சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
பெண்களை மையப்படுத்தியே இந்த குடும்பங்கள் வாழ்வாதாரம் அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த சில தசாப்தங்களாக பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நிலைமை உயர்வடைந்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
பெண்களை மையப்படுத்திய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சுயதொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற போர் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 49000 பெண்களும், வடக்கு மாகாணத்தில் 40000 பெண்களும் கணவரை இழந்து வாழ்கின்றனர்.