27.8. 2011ராயீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசும், தமிழக அரசும் அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.காங்கிரசு கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்தப் பிரச்னையில் அக்கறையோடு 3 உயிர்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 30.000-40.000 ஒரு இலச்சம் பேர் இறந்த போதும் இந்த அம்மா இருந்தார் இந்த மூவருக்காய் இறங்கிவருவாரா அய்யா?
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரைத் தூக்கிலிட உத்தரவு வந்துவிட்டது குறித்து சில நாள்களுக்கு முன் செய்தியாளர்கள் என்னிடம் கேட்டனர். தூக்குத் தண்டனை என்பதே கூடாது என்று பல ஆண்டுகளாகச் சொல்லி வரும் கருத்தினை வலியுறுத்தியதோடு, அந்தக் கருத்து இந்த மூவருக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
இந்த வாலிபர்கள் மூவருமே இருபதாண்டுகள் சிறையிலே இருந்துவிட்டார்கள். அவர்கள் செய்தது குற்றமே ஆயினும் - அவர்கள் இத்தனை ஆண்டுகள் சிறையிலே இருந்ததை மனதிலே கொண்டு - மனிதாபிமானத்தோடு - ''மறப்போம், மன்னிப்போம்'' என்ற நிலையில் - உலகமெங்கும் உள்ள தமிழர்கள் எல்லாம் விடுக்கிற வேண்டுகோளினை ஏற்று - தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களைக் காப்பாற்ற நம்மால் முடிந்த முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகிறது.
முடிவெடுக்க இன்னும் சில நாள்களே இருக்கின்ற நிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் இந்தப் பிரச்னையிலே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, இந்த மூவரின் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்திட வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.