முதலாம் துாக்கு பூநகரிநாச்சிக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய கடற்படைத் தளத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராயபக்ச நேற்று திறந்தது.
இரண்டாம் துாக்கு இவ்வளவு தமிழ்ஊடகங்களும் இதன் உருவாக்கத்தையும் நோக்கத்தையும் உணராமை.
மூன்றாம் துாக்கு தேர்தலில் தமிழர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி என்ற மாயையில் நீந்துவது. மற்ர அனைத்திலும் தாம் தோல்வி என்பதை உணராமை.
கிறிசுமனிதர்பற்றி பாராளுமன்றில் பேசியது பெரியவிடயமாக்கப்ட்டிருக்கிறது. அதே தொகுதியில் பல மர்மநோக்கங்களோடு உருவாகிய கடற்படைத்தளம் பற்றியும் அதன்திறப்பு விழா பற்றியும் எதுவும் தெரியாதவர்களாக நாங்கள்.
எதைத் துாக்கிப்பிடிப்பது என்று தெரியாத மோடர்கள் நாங்கள் கிறிசு மனிதர்பற்றிப் பாராளுமன்றில் பேசிக் கொண்டிருக்கம் போதே அதே தொகுதியில் கடற்படைத்தளம் திறக்கப்பட்டமை. ஏமாந்து விட்டோம் ஏமாற்றுகின்றோம் என்பதை உணராது இருக்கின்றோம்.
தமிழ் உயிர்அழிவில் ஊர்அழிவில் சிலரையும் சில நிறுவனங்களையும் வளர்க்கின்றோம் என்பதை தமிழர்கள் உணராது இருக்கின்றோம்.