வடமேற்கு பிராந்திய கடற்படைத் தலைமையகமாக எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படவுள்ள இந்தப் பாரிய தளத்தை அமைப்பதற்காக 752 ஏக்கர் நிலத்தை சிறிலங்கா கடற்படையினர் சுவீகரித்துள்ளனர்.
பூநகரிநாச்சிக்குடா கடற்படைத்தளத்தில் சிறிலங்கா கடற்படையின் தரை மற்றும் கடல் நடவடிக்கைப் பிரிவுகள் நிலைகொள்ளவுள்ளன.
இந்தப் பகுதியில் கடற்பகுதிக் கண்காணிப்பை மட்டுமன்றி கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பையும் சிறிலங்கா கடற்படையினரே பொறுப்பேற்கவுள்ளனர்.
பூநகரிநாச்சிக்குடா தளத்தை கன்டோன்மென்ட் தளமாக மாற்றியமைக்கவுள்ளதாகவும், மன்னாரில் இருக்கும் வடமேற்கு பிராந்திய கடற்படைத் தலைமையகத்தை இங்கு மாற்றவுள்ளதாகவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கரையோரப் பகுதிகளில் சிறிலங்கா கடற்படை மேலும் பல முகாம்களை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பூநகரிநாச்சிக்குடா கடற்படைத் தளத் திறப்பு விழாவில் சிறிலங்கா கடற்படை தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க, கூட்டுப்படைகள் தளபதி எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக உள்ளிட்ட படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.