27 .08.2011த.ஆ.2042- உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் - எசு.எம். கிருசுணா.சண்டைக்காறனைவிட சாட்சிக்காரன் சங்கடத்தில். இந்தநிலைவரும் என்றும் குரங்குக்காவல் மாதிரியே வெள்ளைக்காரன் இலங்கை இந்தியாவைக் கையாழ்வான் என்று குமரிநாடு. நெற் 2009 இல் கட்டுரை ஏழுதியிருந்தது.போர்க் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு சனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க ராயாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நுலாண்ட் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்களுக்கு சாதகத்தன்மையை உண்டு பண்ணும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்hர்.
இலஙi;க அசராங்கம் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் சரியான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணைகளை நடத்த முடியாவி;ட்டால் சர்வதேச நாடுகளின் தலையீடு அவசியம் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரங்கள் குறித்து தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய நாடுகளுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலளார் ரொபர்ட் ஓ பிளக்கின் இலங்கை விஜயத்தின் போது கலந்துரையாடுவார் என நுலாண்ட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதன்போது, அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது என அவர் தெரிவித்துள்ளார்.
உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் - எசு.எம். கிருசுணா
இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்பபடையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை நீக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்கள் தொடர்பில் அந்நாட்டு பாராளுமன்றில் விளக்கமளிக்கும் நோக்கில் ஆற்றிய உரையின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையானதும் நம்பகரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளான மக்களுக்கு தொடர்ந்தும் இந்தியா நிவாரணங்களை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.