26 .8.2011 இது தான் நரித்தனத்தின் உச்சம். போர்க்காலம் வியேநம்பியார் பாக்கீன் மூன் அய்.நா முடக்கம் இதற்கெல்லாம் யார்காரணம்.?ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான நிலைப்பாட்டை தற்போதைக்கு வெளியிடப் போவதில்லை என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் எந்தவொரு நிறுவனத்திலும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக பேசப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய நிறுவனங்களில் நிபுணர் குழு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் அது தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடு வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நிபுணர் குழு விவகாரம் உத்தியோகபூர்வமாக பேசப்படும் வரையில் இந்தியா காத்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பாராளுமன்றில் ஆற்றிய உரையின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.