இலங்கை தமிழ் கட்சிகளுடன் பேசிய விடயங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் அலசப்படும் என்று கூறுகிறார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனம் நாச்சியப்பன்.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பாக, இலங்கைக் குழுவைப் பொறுத்தவரை, பாதுகாப்பு என்ற பெயரில் ஆக்கிரமித்துள்ள நிலங்களில் இருந்து இலங்கை இராணுவம் வெளியேறி, அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்,
தமிழர் பகுதிகளில் இராணுவத்தை நிறுத்தக் கூடாது,
புலம் பெயர்ந்த மக்களை இடைத்தங்கல் முகாம்களில் இருந்து சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த வேண்டும்,
அவசரகாலச் சட்டம் மற்றும் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்
என கருத்துத் தெரிவித்ததாக, சுதர்சன நாச்சியப்பன், பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சி, முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் எம்.பி.க்களை இக் கூட்டத்துக்கு அழைக்காதது ஏன் என்று சுதர்சன நாச்சியப்பனிடம் கேட்டபோது, ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்துக்களை ஏற்கனவே அறிந்திருப்பதாகக் கூறினார்.
அதே நேரத்தில், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஜேர்மனியில் உள்ள வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கேட்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.