பேரணி நடத்தவென புதுடெல்லி செல்லவுள்ள இளைஞர்களை இன்று (24.08.2011) மாலை 5 மணிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் தா.பாண்டியன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் வழியனுப்பி வைக்கிறார்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டெங்கு காய்ச்சலுடன் உயர்தரப் பரீட்சை எழுதிய யாழ். இந்து கல்லூரி மாணவன் பரிதாப மரணம்
யாழ். இந்துக் கல்லூரி மாணவனான செல்வராசா ஜனகன் (வயது18) என்பவரே நேற்று முன்தினம் யாழ். ஆஸ்பத்திரியில் மரணமானார்.யாழ்.இந்துக் கல்லூரியில் கணித பாடப்பிரிவில் கல்வி கற்றுவந்த அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இந்த மாணவர் கடந்த சனிக்கிழமை இறுதியான ஆங்கிலப் பாடப் பரீட்சைக்கும் தோற்றியிருந்தார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:
கடந்த 7 தினங்கள் வரையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவன் ஜனகன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து உட்கொண்டு வந்துள்ளார்.
டெங்கு நோய்த் தாக்கம் இருப்பது தெரிந்திருக்கவில்லை. பரீட்சை எழுதுவதற்காக மாணவன் ஜனகன் சாதாரண மருந்துக் குளிகைகளுடன் சமாளித்து வந்துள்ளார்.
எனினும் நேற்று முன்தினம் அவரது நிலைமையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. காய்ச்சல் உக்கிரமடைந்து அவர் சோர்வடைந்தார். பலவீனமான நிலையை அடைந்தார்.
அவர் உடனடியாக யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நிலைமை மோசமடைந்து ஒரு சில மணிநேரத்தில் ஜனகன் உயிரிழந்தார்.
வைத்தியப் பரிசோதனையின் மூலம் அவர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. வைத்திய அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது சடலம் உடற்கூற்று சோதனையின் பின்னர் உறவினர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டது.