குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

யாழ். இந்து கல்லூரி மாணவன் பரிதாப மரணம்போர்குற்ற விசாரணை வலியுறுத்தி இந்திய பாராளுமன்றை முற்றுகை

25.08.2011-இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு கராணமான அனைவர் மீதும் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்தி தண்டிக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி புதுடெல்லியில் இந்திய பாராளுமன்றம் நோக்கி இந்த ஆர்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரணி நடத்தவென புதுடெல்லி செல்லவுள்ள இளைஞர்களை இன்று (24.08.2011)  மாலை 5 மணிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் தா.பாண்டியன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் வழியனுப்பி வைக்கிறார்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டெங்கு காய்ச்சலுடன் உயர்தரப் பரீட்சை எழுதிய யாழ். இந்து கல்லூரி மாணவன் பரிதாப மரணம்

 யாழ். இந்துக் கல்லூரி மாணவனான செல்வராசா ஜனகன் (வயது18) என்பவரே நேற்று முன்தினம் யாழ். ஆஸ்பத்திரியில் மரணமானார்.யாழ்.இந்துக் கல்லூரியில் கணித பாடப்பிரிவில் கல்வி கற்றுவந்த அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இந்த மாணவர் கடந்த சனிக்கிழமை இறுதியான ஆங்கிலப் பாடப் பரீட்சைக்கும் தோற்றியிருந்தார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:

கடந்த 7 தினங்கள் வரையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவன் ஜனகன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து உட்கொண்டு வந்துள்ளார்.

டெங்கு நோய்த் தாக்கம் இருப்பது தெரிந்திருக்கவில்லை. பரீட்சை எழுதுவதற்காக மாணவன் ஜனகன் சாதாரண மருந்துக் குளிகைகளுடன் சமாளித்து வந்துள்ளார்.

எனினும் நேற்று முன்தினம் அவரது நிலைமையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. காய்ச்சல் உக்கிரமடைந்து அவர் சோர்வடைந்தார். பலவீனமான நிலையை அடைந்தார்.

அவர் உடனடியாக யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நிலைமை மோசமடைந்து ஒரு சில மணிநேரத்தில் ஜனகன் உயிரிழந்தார்.

வைத்தியப் பரிசோதனையின் மூலம் அவர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. வைத்திய அறிக்கையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது சடலம் உடற்கூற்று சோதனையின் பின்னர் உறவினர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.