தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன், தமி;;ழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த யுத்த நிறுத்த காலத்தில் இவ்வாறான பாரிய பொங்குதமிழ் பேரணிகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே பணியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைந்து இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் பங்கு பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவருக்கும் மனிதாபிமான அடிப்படையில் பரீட்சைக்குத் தோற்ற நீதவான் அனுமதியளித்துள்ளார்.
இதேவேளை, கிறிஸ் பேய் பதற்றத்தை ஏற்படுத்தி வடக்கு கிழக்கில் அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்போருக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடாபியை பின்பற்றியவர்களுக்கும் அதே நிலைமை ஏற்படும் - சரத் பொன்சேகா
24 .8. 2011
பொதுமக்கள் பொறுமையுடன் காத் திருப்பதாகக் குறிப்பிட் டுள்ளார்.லிபிய அதிபர் முஹம்மர் கடாபியை பின்பற்றியவர்களுக்கு அதே நிலைமை ஏற்படும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
லிபிய அதிபர் கடாபி தனது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடாபியின் இரண்டாம் நிலைத் தலைவர் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டிலும் கடாபியை பின்பற்றும் சிலர் இருப்பதாகவும், கடாபியை தழுவிக் கொண்டவர்களுக்கும் இதே நிலைமை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலைக்கு சென்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தில் வெற்றியீட்டியிருக்க முடியாது – சம்பந்தன் சம்பந்ன் அய்யா குமரிநாடுபற்றி அறியலாம்.
24 .8. 2011
இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தில் வெற்றியீட்டியிருக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், இந்தியாவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாட்டின் சகல அரசியல்வாதிகளும் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகக் குஹறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுக்கு மட்டுமன்றி சிங்களவர்களின் பூர்வீகமும் இந்தியாதான் என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை அரசாங்கம் சில உறுதிமொழிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகவும் அவற்றை நிறைவேற்றுமாறு தற்போது வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பிளவடைய வேண்டும் என்பது இந்தியாவின் நோக்கமல்ல எனவும், தமிழ் மக்களுக்கு சமவுரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வருவதாகவும அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது உதவிகளை வழங்கிய ஏனைய நாடுகளுடன் இந்தியாவிற்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் கோரிக்கை என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் எந்தவிதமான தப்பான அபிப்பிராயங்களும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த வலயங்கள் தொடர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கில் இன்னமும் இயல்பு நிலை ஏற்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்களை விடவும் நிலையான தீர்வுத் திட்டமொன்றையே மக்கள் வேண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை தெற்கு மக்கள் அறிந்திருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஏழு மாதங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கம் பற்றி தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டால் மட்டுமே தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவசர நிலைமைகளின் போது அவசரகாலச் சட்டம் அமுல்படுத்துவதில் தவறில்லை எனவும், அந்தச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதனால் நாட்டில் பல்வேறு அடக்குமுறைகள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.