குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

பூநகரி நாச்சிக்குடாவில் புதிய நிரந்தரத் தளத்தை நிறுவுகிறது சிறிலங்கா கடற்படை

 23.08.2011.பூநகரி வடமேற்கு கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை நாச்சிக்குடாவில் புதியதொரு தளத்தை நிறுவி வருகிறது. இந்தக் கடற்படைத் தளத்தை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராயபக்ச விரைவில் திறந்து வைக்கவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடற்புலிகளால் முக்கிய தளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பூநகரி நாச்சிக்குடாவில் சிறிலங்கா கடற்படை புதிய தளத்தை அமைத்து வருகிறது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மன்னாரில் அதிகளவிலான கடற்படைத் தளங்களை சிறிலங்கா கடற்படை நிறுவி வரும் நிலையிலேயே, பூநகரி நாச்சிக்குடாவிலும் புதிய தளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு ஏற்கனவே சிறிலங்கா கடற்படையின் சிறிய பிரிவு ஒன்று நிலைகொண்டுள்ள போதும், அதனை விரிவாக்கி நிரந்தரத் தளமாக அமைக்கும் நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் தளம் அமைக்கப்பட்டதும் அங்கு மேலதிக கடற்படையினரும், படகுகள் மற்றும் ரேடர்களும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்திய மீனவர்களின் ஊடுருவல்களைத் தடுப்பதை மையமாகக் கொண்டு இந்தக் கடற்படைத் தளம் செயற்படவுள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.