விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மன்னாரில் அதிகளவிலான கடற்படைத் தளங்களை சிறிலங்கா கடற்படை நிறுவி வரும் நிலையிலேயே, பூநகரி நாச்சிக்குடாவிலும் புதிய தளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு ஏற்கனவே சிறிலங்கா கடற்படையின் சிறிய பிரிவு ஒன்று நிலைகொண்டுள்ள போதும், அதனை விரிவாக்கி நிரந்தரத் தளமாக அமைக்கும் நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் தளம் அமைக்கப்பட்டதும் அங்கு மேலதிக கடற்படையினரும், படகுகள் மற்றும் ரேடர்களும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்திய மீனவர்களின் ஊடுருவல்களைத் தடுப்பதை மையமாகக் கொண்டு இந்தக் கடற்படைத் தளம் செயற்படவுள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.