23 2011 -இன்று இலங்கை விவகாரம் விவாதிக்கப்படும் என அவைக் குறிப்பில் ..இந்திய பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. துவக்கத்திலேயே இலங்கை விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தமிழக எம்பிக்கள் எழுத்து மூலம் கோரியிருந்தனர். எங்கும் கிள்ளுக்கீரைத்தமிழன் என்று எண்ணுவதா?
இந்நிலையில் இன்று இலங்கை விவகாரம் விவாதிக்கப்படும் என அவைக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இன்று அவை கூடியதும் தமிழக எம்பிக்கள் இலங்கை விவகாரம் தொடர்பான விவாதத்தை அவை முதன் முதலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அவை துவங்கிய சிறிது நேரத்திலேயே வட இந்திய பாரதீய ஜனாதா எம்பிக்கள் அன்னா அசாரேவின் உண்ணாவிரம் தொடர்பாக பிரச்சனை கிளப்பியதோடு ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை பதவி விலக்க வேண்டும் என்று கோரி அவை நடவடிக்கைகளை முடக்கினர். இதனால் அவை முழுமையாக முடங்கிப் போனது. இதனால் அவைத் தலைவர் இன்று மதியம் இரண்டு மணி வரை அவையை ஒத்தி வைத்தார்.