குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இரணைமடுக்குளத்திலிருந்து யாழிற்கு குழாய்மூலம் நீர் வழங்கும் திட்டம் 164 மில்லியன் பூநகரிக்கும்தண்ணி

 23.08.2011-இரணைமடுக்குளத்திலிருந்து யாழ். மாவட் டத்திற்கு குழாய்மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கு 164.04 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். குடிநீரைக்கவனமாகப் பேணும் பழக்கத்திற்கான பயிற்சி மக்களுக்கு தேவை. வழிப்புணர்வு ஏற்படக் கண்காட்சிகள் பிரச்சாரங்கள் தேவை.இது குமரிநாட்டின் கருத்து.  இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ்.குடாநாடு முழுவதும் நீர் வழங்கும் பாரிய திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.இதன்மூலம் எதிர்காலத்தில் யாழ். குடா நாட்டில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.யாழ்.குடாநாட்டில் யாழ்ப்பாணம், கொடிகாமம்,கரவெட்டி,சாவகச்சேரி,கோப்பாய்,அச்சுவேலி,சண்டிலிப்பாய்,சங்கானை,நல்லூர்,எழுவைதீவு, மூளாய்,பளை,புங்குடுதீவு,கைதடி,அனலைதீவு,பூநகரி,அரியாலை,காரைநகர், வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகமும் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது

. குளத்தினை ஆழப்படுத்தி திருத்தும் வேலைகள் தற்போது இடம்பெற்று வருவதோடு அணைக்கட்டை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டமக்கள் பயனடைய உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.