போராட்டத்தின் ஆரம்ப காலப்பகுதிகளில் இராணுவ கெடுபிடிகளையடுத்து குடும்பத்தவர்கள் வீட்டினை விட்டு வெளியேறியிருந்த நிலையில் அவ்வீடு அப்போது கொள்ளையிடப்பட்டிருந்ததுடன் சேதமாக்கப்பட்டும் இருந்தது.
அண்மைக் காலங்களில் யாழ் செல்லும் தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட வேண்டிய சுற்றுலா மையங்களில் ஒன்றாகவும் அது மாறியிருந்தது. இதையடுத்து அவசர அவசரமாக அவ்வீடு மீண்டும் படையினரால் தகர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த இடிபாடுகளை பார்வையிடவும் நாள் தோறும் சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்தும் படையெடுத்து சென்ற வண்ணமேயுள்ளனர். இதையடுத்தே அந்த இடிபாடுகளையும் அகற்றிவிட படைத்தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே வல்வெட்டித்துறையின் தீருவிலில் அமைக்கப்படடிருந்த குமரப்பா புலேந்திரன் ஞாபகார்த்த தூபிகளும் அண்மையில இடித்தழிக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு முற்றாக இடிக்கப்படுகிறது -
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முற்றாக இடிக்கும் பணிகள் தற்போது இராணுவத்திரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வல்வெட்டித்துறையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புடையினரால் பெரிய புல்டோசர்கள் கொண்டு செல்லப்பட்டு வீடு இடிக்கும் பணிகள் தொடரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது:-