குமரிக்கண்டம்
இதுவரை நடந்திருக்கிற உலகத் தமிழ் மாநாடு எதிலுமே தமிழ்மான உரிமைப் பண்பாடு என்பதை எந்த ஈர வெங்காயமும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தவில்லை. அப்படி எந்த அக்கறையும் இல்லை. மதுரை மாநாட்டில் பாவலரேறு அய்யாவுக்குப் பதிலாக அனுமதிக்கப்பட்ட திரு.காளிமுத்து அவர்களின் உரைமட்டுமே சிறிது ஆறுதலாக இருந்தது.
குமரிநாடு முக்கோணம் போன்று அய்ந்து கண்டத்துடனும் மிகநெருங்கிய தொடர்புடையதாக இருப்பதை அவதானியுங்கள். இதனை நிலவியலாளர்கள் பிறமொழியில் லெமோறியா என்றழைப்பார்கள். தமிழர்கள் பழையபாடல்களில் உள்ளபடி குமரிநாடு என்ற அழைப்பார்கள். இதுதொடர்பான ஆய்வினை மேற்கொள்ள இந்திய அரசுதட்டிக்கழித்து வருகிறது. உலகில் பழமையா நாகரீகம் உடைய இந்தியா சமசுகிருதம் இந்தி எல்லாம் பின்தள்ளப்பட்டு லெமோறியா என்பதும் தமிழ் என்பதும் உலகளவில் பெயர்பெற்றுவிடும் என்ற அச்சமே அதற்கு காரணமாகும். இங்கிலாந்தும் அமெரிக்காவுமே லெமோறியா பற்றி ஆழ்கடல் ஆய்வைசெய்துள்ளார்கள் இதனையும் இந்தியாவில் வெளியிடவேண்டாம் என்று இந்தியா இருநாட்டினரிடமும் வேண்டிக்கொண்டது.
ஒப்பியன் மொழிநூலை செய்த மொழிநூல் மூதறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களை ஆதரிக்காமல் இருட்டடிப்பு செய்தார் கருணாநிதி. எம்யிஆர் தான் பாவாணரை அன்புடன் ஆதரித்தார். குமரிக்கண்டத்தின் உண்மை பற்றி அமெரிக்க தொல்லியல் ஆய்வுக் கழகம் இந்துமாக்கடலில் ஆய்வுசெய்து ஒருவரைபடத்தையே உருவாக்கிவிட்டது. இதுகூடத் தெரியாமல் எத்தனையோ முண்டங்கள் குமரிக்கண்டம் ஒரு கற்பனைதான் என்று வரலாற்றுத் துரோகம் செய்கிறார்கள். செம்மொழி மாநாட்டில் என்ன கிழிக்கப் போகிறார்களோ?