மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி சந்திரபிரபா எம்.ஏ., தமிழ் முதுநிலைப்படிப்பில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். அதிகம் படித்திருந்தாலும் கிராமத்து பெண்மணியான அவர் எப்போதும் வெகுளியாகவே பேசுவார். முதல்வர் யெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவரது கணவர் முத்தையா தனியாக 2 நாள் கிளாஸ் எடுத்திருந்தார் அவருக்கு.
கணவன் சொல்லே மந்திரம் என்ற ரீதியாக போயஸ் கார்டனுக்குள் நுழைந்த சந்திர பிரபா நேர்காணல் நடந்த அறைக்குள் நுழைந்ததும் முதலமைச்சர் யெயலலிதாவின் காலில் நெடுஞ்சான் கிடையாக காலில் விழுந்து எழுந்ததோடு குனிஞ்சுக்கிட்டே தலையை நிமிராமல் கையை எடுத்து கும்பிட்டப்படி சில நிமிடங்கள் நின்றாராம். யெயலலிதா 'சீட்டுல உட்காருங்க' என்று சொன்னதற்கு 'இல்லம்மா' என்று சொல்லி விட்டு...திடீரென “தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வம்”என்று கிராமத்து பாணியில் பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல் புகழத்தொடங்கி விட்டாராம்.
மனப்பாடம் செய்து ஓப்பிப்பதுபோல் சந்திர பிரபா கூறியதை கேட்ட யெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தாராம்.பின்னர், 'போதும்மா, போதும் இது பொதுக்கூட்ட மேடையில்லை' என்று சொல்லி சிரித்து விட்டு.. என்ன படிச்சிருக்கீங்க என்றாராம். தமிழில் ஆராய்ச்சி பட்டம் வாங்கியிருக்கேன்னு சொல்லவும் அப்படியா என்பதுபோல் பார்த்த யெயலலிதா மீண்டும் வாய் விட்டு சிரித்து சரி போய் வா...என்று வாழ்த்து என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.
- எம்.கார்த்தி