‘வரலாற்று ரீதியாக இந்திய வம்சாவழியினர்தான் நநநநநநநசிறிலங்காவில் வாழ்ந்து வருகின்றார்கள். ஸ்ரீலங்காவில் நடக்கும் ஒவ்வொரு விவகாரமும் இந்தியாவின் தமிழ்நாட்டிலும் அதன் ஏனைய பகுதிகளிலிலும் நேரடித்தொடர்பு உடையதாகவே இருக்கின்றது.
13 ஆவது திருத்தச்சட்டம், அதற்கு அப்பால், இரண்டாவது சபை என்று கூறியது எல்லாம் போய் இப்போது பாராளுமன்றத் தெரிவுக்குழு என்றெல்லாம்சனாதிபதி பேசுகின்றார், இந்திரா காந்தியைப் போன்று எம் கையை முறுக்கிய மாதிரியான அணுகுமுறையைக்
கடைப்பிடிக்காது, அரசியல் தீர்வு காணும் முயற்சியை விரைந்து காணும்படி இந்தியா சாந்தமாக கோருகின்றது. ஆனால் நாம் அச்செய்திக்கு காது கொடுப்பது போன்று தெரியவில்லை.
இந்திய-இலங்கை உடன்படிக்கையை 1980 களில் திணித்ததிலும் பார்க்க இந்தியாவின் சர்வதேச வளர்ச்சி இன்று 100 வீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மேற்கு நாடுகள் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வழிகாட்டலையே எதிர்பார்த்து நிற்கின்றன.
உலக ரீதியில் இந்தியாவிற்கு உள்ள செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் இந்தியாவுடனும் சீனாவுடனும் நல்ல உறவுகளைப் பேண முடியும். முன்னரும் இவ்வாறே நடந்துள்ளோம். இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும் . அப்போது எமக்கு இந்தியாவின் செல்வாக்கு உதவ முடியாது போகும் நிலை ஏற்படும் ‘ என்றும் சயந்த தனபால லக்பிம ஆங்கில வார இதழுக்கு தெரிவித்தார்.