21.08.2011-வடக்கு கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின்கீழ் யாழ்.மாவட் டத்தில் 13 ஆயிரத்து 350 வீடுகள் அமைக்கும்பணி இடம் பெற்று வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
வடக்கு கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின்கீழ் யாழ்.மாவட்டத்தில் வீடமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 598 வீடுகளும், நெடுந்தீவில் 309 வீடுகளும், யாழ்.பிரதேச செய லர் பிரிவில் 361 வீடுகளும், காரைநகர் உதவி அரச அதிபர் பணிமனையில் 360 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.
கரவெட்டிப் பிரதேச செயலர் பிரிவில் 888 வீடுகளும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 338 வீடுகளும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2566 வீடுகளும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 537 வீடுகளும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 366 வீடுகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 53 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 956 வீடுகளும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 407 வீடுக ளும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 1125 வீடுகளும் வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் 461 வீடுகளும் மருதங்கேணியில் 25 வீடு களும் அமைக்கப்படவுள்ளன.
இதில் 10 ஆயிரத்து 391 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 2 ஆயிரத்து 959 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்