குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

2011 தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உள்ளுராட்சி உறுப்பினர் பதவியேற்பு வைபவம்.

21.08.2011-உள்ளுர் அதிகாரசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களது பததவியேற்பு வைபவமும், சத்தியப் பிரமாணம் செய்யும்; நிகழ்வும் வைபவ ரீதியாக 20.08.2011 சனிக்கிழமை மு.ப 9.30 மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் கௌரவ இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் (தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு, தலைவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி) நடைபெற்றது. சமீபத்தில் நிகழ்ந்த உள்ளுராட்சித் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, அம்பாறை  ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 உள்ளுராட்சி அமைப்புகளின் அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்று சத்தியப் பிரமாணம் செய்ததோடு ஒவ்வொரு உள்ளுராட்சி அமைப்புகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் அறிமுகம் செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர். இவ் வைபவத்தில் தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்த சுரேஸ் பிரேமசந்திரன்(பா.உ) திரு. அரியநேந்திரன், திரு. சித்தார்த்தன், திரு விநாயகமூர்த்தி, திரு மாவை சேனாதிராசா, திரு இரா.சம்பந்தன் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. திரு இரா.சம்பந்தன் தனது உரையில் இலங்கையில் ஜனநாயகம் மதிக்கப்படவேண்டுமாயின் தமிழ் மக்களின் ஏகோபித்த இந்த முடிவு மதிக்கப்பட்டு உள்ளுராட்சி அமைப்புகள் ஊடாக தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு வயது முதிர்ந்தவர்களின் கட்சியல்ல, அதற்குள் இளைஞர்கள், மகளிர், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், நேர்மை, சத்தியம் வழி நடப்பவர்கள், எதற்கும் விலை போகாதவர்கள் அணி திரள வேண்டும். ஒற்றுமையைக் காத்து ஒரே குரலில் எமது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
 
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொது செயலாளர் மாவை சேனாதிராசாவின் நன்றியுரையுடன் வைபவம் இனிதே நிறைவு பெற்றது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.