21.08.2011-உள்ளுர் அதிகாரசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களது பததவியேற்பு வைபவமும், சத்தியப் பிரமாணம் செய்யும்; நிகழ்வும் வைபவ ரீதியாக 20.08.2011 சனிக்கிழமை மு.ப 9.30 மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் கௌரவ இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் (தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு, தலைவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி) நடைபெற்றது.
சமீபத்தில் நிகழ்ந்த உள்ளுராட்சித் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 உள்ளுராட்சி அமைப்புகளின் அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்று சத்தியப் பிரமாணம் செய்ததோடு ஒவ்வொரு உள்ளுராட்சி அமைப்புகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் அறிமுகம் செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர். இவ் வைபவத்தில் தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்த சுரேஸ் பிரேமசந்திரன்(பா.உ) திரு. அரியநேந்திரன், திரு. சித்தார்த்தன், திரு விநாயகமூர்த்தி, திரு மாவை சேனாதிராசா, திரு இரா.சம்பந்தன் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. திரு இரா.சம்பந்தன் தனது உரையில் இலங்கையில் ஜனநாயகம் மதிக்கப்படவேண்டுமாயின் தமிழ் மக்களின் ஏகோபித்த இந்த முடிவு மதிக்கப்பட்டு உள்ளுராட்சி அமைப்புகள் ஊடாக தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு வயது முதிர்ந்தவர்களின் கட்சியல்ல, அதற்குள் இளைஞர்கள், மகளிர், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், நேர்மை, சத்தியம் வழி நடப்பவர்கள், எதற்கும் விலை போகாதவர்கள் அணி திரள வேண்டும். ஒற்றுமையைக் காத்து ஒரே குரலில் எமது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொது செயலாளர் மாவை சேனாதிராசாவின் நன்றியுரையுடன் வைபவம் இனிதே நிறைவு பெற்றது.