இது குறித்து முதல்வர் மேலும் தெரிவிக்கையில்,
இங்குள்ள விடுதிகளில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படாமல் இயங்கிவருகின்றன என்பது உண்மையாகும். இவற்றைப் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
இங்கு நகரிலுள்ள வீடுகளே விடுதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விடுதிகள் அனைத்தும் புலம்பெயர் தமிழர்களுக்குச் சொந்தமானது. அவர்களுக்குப் பணம் தேவை என்பதால் வேற்று இனத்தவர்களுக்கும் அதிகம் லாபம் தேடித்தருபவர்களுக்கும் வாடகைக்கு விடுகின்றனர்.
பணம்தான் முக்கியம் என்ற நோக்கில் விடுதி நடத்துனர்களும் சமூகம் தொடர்பில் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் அக்கறையுடைய நடத்துனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிகிறது எனக் கண்ணீர் வடிக்கும் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் சமூகம் மீது அக்கறையுடையவர்களா எனத் தெரியவில்லை.
இந்த விடுதிகளைப் பதிவு செய்வதாயின் உரிமையாளர்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். காணி அல்லது வீட்டு உரிமைப் பத்திரம் அவசியமாகும். ஆனால் அவை விடுதி நடத்துனர்களிடம் இல்லை. ஏனெனில் விடுதிகளின் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தமிழர்களேயாகும்.
எனினும் இவற்றைப் பதிவு செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என முதலவர் தெரிவித்தார்.