குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

புதுடெல்லிக் கருத்தரங்கில் ஈபிடிபியை ஒதுக்கியது இந்தியா!ஈ.பி.டி.பி திரைமறைவில் நின்றால்

 19.08.2011 பூட்டானுக்கு சென்று பேசியபோது மலையகம் உட்பட என்றே கோரிக்கை ஓங்கிஒலித்தது  இப்போ எப்படியோ! சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் ஈபிடிபியை இந்திய அரசாங்கம் ஒதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசாங்கத்தின் பின்புல ஆதரவுடன் புதுடெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவள்ள கருத்தரங்கிற்கு ஏழு தமிழ் அரசியல்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் வடக்கு அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஈபிடிபிக்கு இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

எதிர்வரும் 23,24ம் நாட்களில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கை உலக அபிவிருத்திக்கும், மனிதஉரிமைகளுக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராசாவும், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஆனந்தசங்கரியும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதனும், புளொட் சார்பில் சித்தார்த்தனும், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சார்பில் வரதராஜப்பெருமாள் மற்றும் சிறிதரன் ஆகியோரும், ஈஎன்டிஎல்எவ் சார்பில் பரந்தன் ராஜனும் இந்தக் கருதரங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் ஈபிடிபி பிரதிநிதிகள் எவரும் இந்தக் கருத்தரங்கிற்கு அழைக்கப்படவில்லை.

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் புதுடெல்லி வர இந்திய அரசாங்கம் எவ்வாறு அனுமதி அளித்தது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்தநிலையிலேயே ஈபிடிபியை இந்தியா ஒதுக்கத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.