குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

கிளிநொச்சி 8ம்கட்டைப்பிரதேசத்தில் கிறீசு பூசிய கறுத்த மனிதனால் பதட்டம்

18.08.2011-கிளிநொச்சி 8ம்கட்டைப்பிரதேசத்தில் கிறீசு பூசிய கறுத்த மனிதன் கிராமத்திலுள்ள பெண்களை துரத்தினான் எனப்பரவிய செய்தியையடுத்துப் பிரதேசத்தில் இன்றிரவு பதற்றம் நிலவியது இந்நிலையில் மக்கள் குழுக்களாக பிரிந்து வீடுகளில் தங்கியிருக்க ஆண்கள் வீதிகளில் காவல் நின்றுள்ளனர். நேற்று மாலை6.30 மணியளவில் 8ம்கட்டை பிரதேசத்தில் காட்டு ஓரத்திலிருந்து வந்த உடலில் கிறீஸ் போன்ற பொருளை உடலில் பூசிக்கொண்ட கறுத்த மனிதர்கள் கிராமத்தில் கண்ணி வெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 3பெண்களைத் துரத்தி வந்துள்ளாகள். அவர்கள் கூச்சலிட்டபடி குடிமனைக்குள் ஓடி வந்ததையடுத்து கிராமமக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
 
இதனையடுத்து குறித்த மர்மமனிதர்கள் அங்கிருந்து  தப்பிச் சென்றுவிட்டதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். இதனைடுத்து 8ம் கட்டை, பாரதிபுரம், மணியங்குளம், வன்னேரிக்குளம், அக்கராயன்குளம் போன்ற பகுதிகளில் மக்கள் குழுக்களாக பிரிந்து பாதுகாப்பான கல் வீடுகளில் தஞ்சம் புகுந்து தங்கியிருந்துள்ளனர்.
 
மேலும் முறிகண்டி பாரதிபுரம் வீட்டுத்திட்டம் பகுதியில் கிறிசு மனிதர்களால் பெண்ணொருவர் வாள்வெட்டுக்கிலக்காகியதாக பரவிய வதந்தியால் முறிகண்டிப் பிரதேசத்தில் பரபரப்பு நிலவியது. முற்றிலும் காட்டுப்பகுதியை அண்டியுள்ள இந்தப்பகுதியில் இரவு நேரம் தாம் மிகுந்த அச்சத்துடன் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
 
இதேபோல் வன்னேரிக்குளம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த சிரமதானமொன்றின்போது கிறீஸ்மனிதன் தொடர்பாகவும் அதன் அச்சுறுத்தல் தொடர்பாகவும் தெரியப்படுத்திய இராணுவத்தினர் காட்டு ஓரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இரவு வேளைகளில் வீதிக்கரை வீடுகளில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
 
மேலும் காட்டுப்பகுதியில் பாதுகாப்பிற்காக படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரியப்படுத்தியுள்ளனர். இதனால் இந்தப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்தும் பதற்றமும் அச்சமான சூழலும் நிலவி வருவதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இதேவேளை ஆனைவிழுந்தான் குளத்திரேத்தில் குடியிருந்த மக்கள் அழைத்துவரப்பட்டு ஆனைவிழுந்தான் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.