16 .08. 2011-இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்கு விமல் வீரவன்ச எதிர்ப்பு-சாட்டுப்போக்கு ஒப்பந்தம் செய்தபிரதமருக்க துப்பாக்கியால் அடித்தகாட்சி உலகத்திற்கு காட்டப்படவேண்டும். இந்திய வெளிவிவகார அமைச்சர் எச்.எம். கிருச்ணாவின் கருத்துக்கு வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் எசு.எம். கிருச்ணா வெளியிட்ட கருத்துக்களை விமல் வீரவன்ச கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய படையினர் இலங்கையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் முதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் சனாதிபதி .ஆர். சயவர்தன காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் முதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இறுதிக் கட்ட போர் தொடர்பில் மட்டும் விசாரணை நடத்தப்படக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யே.ஆர். சயவர்தனவின் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து தலைவர்கயும் யுத்தம் செய்த போதிலும், சனாதிபதி மகிந்த ராசபட்சவே போருற்க்கு முற்றுப்புள்ளி வைத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக் கட்டபோரின் போது மிகவும் சொற்ப அளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்களே இடம்பெற்றதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்