குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?

திருமங்கலம்: திருமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு, பறக்கும் தட்டு போன்ற பொருட்கள் வானில் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், திடீரென ஒளிரும் தன்மையுடன் சிறிய பொருள் ஒன்று வானில் பறந்தது. பார்ப்பதற்கு சிறிய ரக விமானம் போல் இருந்ததால், மக்கள் சாதாரணமாக எண்ணினர். ஆனால், அதே போன்று அடுத்தடுத்து 4 பொருட்கள் வானில் மிதந்தவாறு நகர்ந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட், உசிலம்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் கண்களில் இவை தென்பட்டன. பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளின் மாடியில் ஏறி, மர்மப் பொருட்கள் பறந்து சென்ற  திசையை பார்த்தனர். சிறிது நேரத்தில் அவை மாயமாயின. பார்ப்பதற்கு அவை பறக்கும் தட்டுகள் போல் இருந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

 

இது குறித்து ஆட்டோ டிரைவர் துரைப்பாண்டி கூறுகையில், ‘‘வானில் அடுத்தடுத்து பறந்து சென்ற மர்மப் பொருட்கள் என்னவென்று புலப்படவில்லை. பறக்கும் தட்டுகளாக இருக்க வேண்டும். இதனால் இரவு முழுவதும் மனதளவில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. இது போல திருமங்கலம் பகுதியில் இதுவரை பார்த்ததில்லை’’ என்றார். ஆசிரியர் வைரமுத்து கூறுகையில், ‘‘வானில் அவ்வப்போது இதுபோன்று பொருள்கள் தட்டுப்படுவது அல்லது பறப்பது உண்டு. விண்கற்கள் அல்லது எரிநட்சத்திரங்களாக இருந்தால் அவை வளிமண்டலத்தை தாண்டியவுடன் எரிந்து விடும். அதனால் பறந்து சென்ற இவை விண்கற்களோ, எரிநட்சத்திரமாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இவை பறக்கும் தட்டுக்களாக இருக்கலாம்’’ என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.