குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

கிண்ணியா கடற்படை முகாம் மீது தாக்குதல்

 15 .08. 2011  கிண்ணியா கடற்படை முகாம் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை ஜீப் வண்டி ஒன்றை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளதாக திருகோணமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த மோதல் சம்பவத்தில் ஒரு காவல்துறை உத்தியோகத்தரும், இரண்டு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.
 
கிறிஸ் பேய் ஒன்று கடற்படை முகாமிற்குள் சென்றதாகத் தெரிவித்து மக்கள் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
முகாம் மற்றும் முகாமை அண்டிய பிரதேசம் சேதமடைந்து உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் கூட்டாக இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.