15.08.2011-பிரித்தானியாவில் இலங்கை மாணவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் இயங்கி வந்த உயர் கல்வி நிறுவனமொன்று திடீரென மூடப்பட்டதனால் அதில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த உயர் கல்வி நிறுவனத்தில் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
லண்டன் ஈடன் ஹவுஸில் அமைந்துள் புல்ஹாம் அன்ட் வேல்ஸ் கல்லூரியே இவ்வாறு திடீரென மூடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, நுவரெலியா, கொழும்பு, ஜாஎல, காலி மற்றும் கண்டி போன்ற நகரங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் இந்த கல்வி நிறுவனத்தில் கல்வி கற்று வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையின் இரண்டு முன்னணி வெளிநாட்டு உயர்கல்வி முகவர் நிறுவனங்களின் ஊடாக குறித்த மாணவர்கள் பிரித்தானியான சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாணவர்கள் சிலர் முறைப்பாடு செய்துள்ளதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பீ.எம்.ஹம்ஸா தெரிவித்துள்ளார்.
இந்த மாணவர்களுக்கு வேறும் கல்லூரிகளில் தமது கல்வியைத் தொடர்வதற்கான ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.