குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சினிமாவிலும் இந்துமாயையிலும் மூழ்கிக்கிடக்கும்வரை காலையில்லை என்றும் மாலையே!

13.08.2011-பூநகரி.பொ.முருகவேள்.ஆசிரியர்.சுவிசு

 மலையக மக்களை மாய்த்த மனிதர் வெள்ளையர்-தமிழர்-சிங்களர்.
 இன்னும்  இ( ல)யங்களில் தேயிலைச் செடி விலங்குகளாய் மாய்கின்றனர்.
இவர்களை இப்படியே வைத்திருப்பதில் இ.தோ.காவிற்கு பங்குண்டு.
 பயனுள்ள சில செய்து பெரியகட்சியாய் பயனற்றுக் கிடக்கிறது.

அது போல்  த. தே.கூ.அமைப்பு வளருமோ! தமிழருக்கு என்னாகுமோ?
மலையகத்தில் இ(ல)யங்கள் அறையாகக் இருக்கிறது
வன்னியில் பத்து தகரம் கூரையாய் வாட்டி வதைக்கிறது.
கிறிசு பேய்வேறு  வந்திருக்கு அது தமிழரை மட்டுமே கடிக்கிறது.

மலையகத்திலும் கடிக்குது கிழக்கிலும் கடிக்குது
கிறிசு பேய் பெண்களையே கடிக்குது கலைக்குது.
பாதுகாப்பு அமைச்சு செயல் ஏன் பதுங்குது?
அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கோ! என்று கேள்வி எழுந்திருக்கிறது?

கிறிசுபேய் என்று  பெயர் வைத்ததே பெரிய இடமோ எனத்தோன்றுகிறது.!
பிடிபடாது நழுவும் வழுக்கும் ஆனால் எப்டியும் உங்களைத்தாக்கும்.
இலங்கையில் தமிழன் பட்டிணியுடன் பயத்துடன் வாழ்ந்து
முன்னேற்றம் இல்லாது மடங்கட்டும் என்ற திட்டங்களே அரங்கேறும்.

தமிழர் வாழ்வில் அவலங்கள் கலந்திருக்கும் அதற்கான
அடித்தளங்கள் உறுதியாய் ஆக்கப்பட்டிருக்கு!
காசுமீரில் சுவிசுபோன்று அழகிருக்கு சீமைஇலந்தை(அப்பிள்)
விளைய வளமிருக்கு மக்கள் மகிழ்ந்து வாழமட்டுமே முடியாதிருக்கு!

 இது கடவுள் வகுத்த விதி என்பது மடமை மந்திரக்காரரின் சூழ்ச்சி!
 கடவுளுக்கு ஓதுவது மடடும் தொழிலல்ல தாம்மட்டும் உயர்ந்திரக்கத்தந்திரம்.
காசுமீராய் தமிழரிடம் மாறிக்கிடக்கிறது தமிழகம் முழுமையாய்
ஆடாது டில்லி ஆடாது. தமிழகமும் உலகத்தமிழினமும் சினிமாவிலும் இந்து
மாயையில் மூழ்கிக்கிடக்கும் வரை காலையில்லை என்றும் மாலையே!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.