13 .08.2011 மருத்துவர் அல்லாத சுகாதார அமைச்சின் செயலாளர் சொற்பொழிவு நிகழ்வொன்றில் இருந்து தமிழ் மருத்துவர்களை வெளியேற்றியுள்ளார்:-
மருத்துவர் அல்லாத சுகாதார அமைச்சின் செயலாளர் ஒருவர் ஆற்றிய சொற்பொழிவில் கலந்துக்கொண்ட தமிழ் மருத்துவர்களை திட்டி மண்டபத்தில் இருந்து வெளியேற்றி சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உள்ளக பயிற்சிகளை முடித்துக்கொண்ட மருத்துவர்களுக்கு மருத்துவர்கள், நோயாளி மற்றும் தொடர்பாடல் என்ற தெனிப்பொருளில் குறித்த செயலாளர் சொற்பொழிவாற்றினார். இந்த சொற்பொழி சிங்கள மொழியில் இருந்ததால், அதனை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்குமாறு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த தமிழ் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையடுத்து சொற்பொழிவாற்றிய செயலாளர் தமிழ் மருத்துவர்களை திட்டி மண்டபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாக சங்கத்தின் பிரதிச் செயலாhளர் மருத்துவர் உபுல் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து சொற்பொழிவில் கலந்துக்கொண்ட சிங்கள மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும் குணசேகர மேலும் கூறியுள்ளார்.