கடந்த 29 ஆம் திகதி இரவு இவரது 40 ஆயிரம் ரூபா பெறுமதியான உழவு மாடொன்றை அவிழ்த்துச் சென்ற சிலர் தம்பிராய் கிராமத்தில் உள்ள மருதடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் வைத்துக் கொன்றபின் இறைச்சிக்காக உரித்துள் ளனர். சம்பவ இடத்தில் அதன் தோல் மற்றும் கழிவுப்பாகங்களை விட்டுச் சென்றமை அடுத்த நாள் காலை தெரியவந்தது.
மேற்படி சம்பவம் தொடர்பாக உழவு மாட்டின் உரிமையாளரால் பூநகரிப் காவல்நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
கா.துறையினரும் வழமை போல சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் மாட்டின் எச்சங்களையும் படம் பிடித்துச் சென்றனர்.இது போன்ற சம்பவம் ஒன்று செல்விபுரத்தில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது.
ஆனால் அதில் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இது வரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவங்களால் கறவைப் பசுக்களையும், உழவு மாடுகளையும் வளர்ப்போரும், ஆடு, மாடுகளைப் பட்டியிலிட்டு வளர்ப்போரும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
எனவே உரிய தரப்பினர் விரைந்து செயல்படுவதோடு இத்தகைய சம்பவங்கள் மேலும் நடைபெறாது தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள் வதோடு சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.