1131. |
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. |
1132. |
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. |
1133. |
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். |
1134. |
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை. |
1135. |
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். |
1136. |
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். |
1137. |
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில். |
1138. |
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். |
1139. |
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. |
1140. |
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு. |