13.08. 2011 கிளிநொச்சி மாவட்டத்தில் 514 பிள்ளைகளுக்கு பெற்றோர் கிடையாது என தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
மேலும், 3329 சிறுவர் சிறுமியர் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பெற்றோர் இருவரையுமே இழந்த 50 சிறுவர் சிறுமியருக்கு மாதாந்தம் 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகாரசபையின் வடமாகாண இணைப்பாளர் எஸ்.சீ.எஸ்.இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெற்றோரை இழந்த சிறுவர் சிறுமியருக்கு கூடுதலான உதவிகள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.