குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

போர் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் கொலைகள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன – அரசாங்கம்

12 .08. 2011  போர் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முதல் தடவையாக அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. போர் நிறைவடைந்த காலப்பகுதியில் வடக்கில் ஆறு பேரும், கிழக்கில் மூன்று பேரும் கொல்லப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாய்மொழி மூலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணத்தில் ஒரு கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
800000 ரூபா கப்பமாக கோரப்பட்டதாகவும் கப்பத் தொகையை வழங்க மறுத்த காரணத்தினால் கடத்தப்பட்டவர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அரசாங்கத்தின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது எனவும், உடனடியாக விசாரணைகள் நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.