12.08. 2011 வடக்கில், காணிகளின் உரிமையாளர்கள் அனைவரும், பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக அரசாங்கம் வழங்கும் காணி உரிமை தொடர்பான விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் சனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் உள்ளவர்கள், வெளிநாடு சென்றவர்கள், வடக்கில் இருந்து தென் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லீம் என அனைத்து மக்களுக்கும் வடக்கில் தமக்கு இருக்கும் காணிகள் தொடர்பில் விண்ணபிக்க முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.
விண்ணப்பப்படிவங்களை நிரப்பி பிரதேச செயலகங்களிடம் வழங்கி, தமது காணிகள் தொடர்பில் சட்டரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தாத எவருக்கும் வடக்கில் காணிகள் வழங்கப்பட மாட்;டாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வடக்கில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் காணி ஆணையாளர் திணைக்களத்தின் றறற.டயனெஉழஅஅனநி.பழஎ.டம என்ற இணையத்தளத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்று விண்ணப்பிக்க முடியும். இதன் பின்னர்,விண்ணப்பங்கள் பரிசிலிக்கப்பட்டு, காணி உறுதிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.